Tuesday, March 22, 2022

திருட்டு கூட்டம் ஆட்சியில் இது எல்லாம் சாதாரணமப்பா.

 தம்பி கொஞ்சம் நில்லுங்கள்.

என்ன வேணும் அண்ணா?
ஒன்றுமில்லை தம்பி அதோ போகிறாரே பெரியவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா?
அதை ஏன் கேட்கிறீர்கள்.அவர் பார்த்த கிராம உதவியாளர் வேலையில் கையெழுத்து வாங்கி கொடுக்க 50ரூபாய் ஒரு ஆளிடம் வாங்கும்போது கையூட்டு காவல்துறை பிடித்துவிட்டது.அந்த வழக்கிலிருந்து விடுபட ஐந்து வருடமாக அலைகிறார் இன்னும் முடியவில்லை.
அட என்னப்பா அநியாயம்.பெரிய பெரிய அதிகாரிகள் லட்ச கணக்கில் லஞ்சம் வாங்கி சொகுசாக இருக்கும் போது 50ரூபாய்க்காக இப்படி அலைகிறாரே பாவம்.
என்ன அண்ணே செய்யமுடியும் அரசியல் செல்வாக்கு வேண்டுமே.
அதுவும் சரிதான் தம்பி 35லட்ச ரூபாயுடன் பிடிபட்ட அதிகாரிக்கு பணியிடைமாற்றம் மட்டும் கிடைக்கிறது.அரசியல் செல்வாக்கால் கைது இல்லை பணிநீக்கமில்லை விசாரணையில்லை.
நாடு போகிறபோக்கில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்பயப்பட தேவையில்லை.
அரசியல் வாதிகளின் துணையோடு லஞ்சம் வாங்குவது குற்றமே இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...