Tuesday, March 22, 2022

ஒரே ஒரு இளையராஜா தான்.

 தமிழகத்தில் எதை சொன்னாலும் தவறு என கட்டம் கட்டி அடிக்கப்படும் இருவர் ..ஒருவர் மோடி.மற்றோருவர் இளையராஜா..

சமீபத்திய ராஜாவின் பேச்சில் ஒரே ஒரு இளையராஜா தான் என அவர் பேசிட்டார் என வழக்கமான தலைக்கனம் திமிர் இளையராஜாவுக்கு என கிளம்பிட்டாங்க..
ஒரு திரைபட பாடல் வெளியிட்டு விழாவில் வருங்கால பாரதிராஜவே எதிர்கால இளையராஜவே என சிலரை வாழ்த்தி பேசினர்..மேடையில் இருந்த இளையராஜா..அதென்ன வருங்கால பாரதி ராஜா,இளையராஜா..ஒரே பாரதிராஜா ஒரே இளையராஜா ஒரே பி.வாசு தான்.ஒரே சூரியன் போல என பேசினார்..
இது தான் மேட்டர் ..ஆன வழக்கமான மீடியாக்கள் ஒரே இளையராஜா என தலைப்பிட்டு செய்தி வெளியிட கிளம்பிட்டானுங்க தலைகனம் இல்லாத திமிர் தனம் இல்லாத கருணையே வடிவான புத்தரின் பேர குழந்தைகள் இசைஞானி தலைகனம் பிடித்தவர் என..
அவர் சொன்னதில் என்ன தவறு..ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே ஒரே ஒரு மைக்கேல் ஜாக்சன், கருணாதிதி, ஜெயல லிதா உட்பட உச்சம் தொட்ட அனைவரும் ஒரே ஒரு தான்..அவரை போல இன்னொருவர் எப்படி சாத்தியமாகும்...இதை தானே சொன்னார்.இதிலும் தன்னை மட்டும் சொல்லல கூட இருந்த பாரதி ராஜா பி.வாசுவையும் சேர்த்தே சொன்னார்.இதில் எங்க தலைக்கனம்.. திமிர்...
அப்படியே இருந்தாலும் அந்த தலைக்கனமும் திமிரும் உங்கள எங்க பாதிக்குது...?
அவரின் பாடல் வேண்டுமா அவரின் குண நலன் வேணுமா.
ஒரு வேளை ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் அவரின் மீது உங்கள் விமர்சனங்கள் சரியாக இருக்கலாம்..ஆனால் இவன் எப்ப வாயை திறப்பான் வைச்சு செய்யலாம் என்ற உங்களின் இந்த அரிப்பு அந்த மாமேதையை எதுவும் செய்ய போவதில்லை...
நீங்க நல்ல பாடல் வேண்டும் என நினைத்தால் இளையராஜா கிடைப்பார்..
அரபிகுத்தே போதும் என்றால்.அநிருத்தும் ஹிப்ஹாப் டமிலாவும் தான் கிடைப்பார்கள்..
ஒரே ஒரு இளையராஜா தான்.
காலத்தின் கடைசி கருணை இந்த இளையராஜா தான்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...