Tuesday, March 22, 2022

சாது மிரண்டால் காடு கொள்ளாது....

 ஆதீனங்களும்,மடாதிபதிகளும் , சாமியார்களும் அரசியல் பேசுவது தவறுதான்.

ஆனால் எப்போது கோயிலுக்குள்ளும் மடங்களுக்குள்ளும் அரசியல் புகுந்துவிட்டதோ அப்போது தங்களை காப்பாற்றி கொள்ளவாவது இவர்கள் அரசியல் பேசித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாய நிலைக்கு கொண்டு வந்ததே இந்த அரசியல்வாதிகள்தான்.
உயிரியல் பரிணாமத்தில் சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட் என்பார்கள். காலமும் சுற்றுசூழலும் மாறிக்கொண்டே இருக்கும்போது அதற்கேற்ப தகவமைத்து கொள்பவை மட்டுமே இந்த உலகில் வாழத் தகுந்தவை என்று இயற்கை தேர்ந்தெடுக்கும்.
இது உயிரினங்களுக்கு மட்டுமல்ல, இதர பிற விஷயங்களுக்கும் கூடத்தான். இந்து சமயமும் இந்துக்களும்
மேம்போக்கனவர்கள் என்பதை மனதில் வைத்து கொண்டு தான் இத்தனை நாட்களாக இந்த திராவிட கூட்டம் கோயிலுக்குள் நுழைந்து ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடியது.
இப்போதோ மதுவுண்ட மந்தியாக அத்துமீறி செல்கிறார்கள். தண்டத்தை வைத்திருக்கும் கை தடியையும் எடுக்கும் தேவை பட்டால் துப்பாக்கியும் தூக்கும் என்பதை உணர வைக்க வேண்டிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.
சாமியார்களும் யோகிகளுக்கும் இந்த உலகில் இழக்க எதுவுமில்லை. ஒன்றுமில்லாத மண்டையில் முடியை நட்டு அலப்பறை செய்யும் மானிடர்கள் மத்தியில் இருப்பதை சிரைத்து துச்சமென தூக்கி கடாசியவர்கள் இந்த துறவிகள்.
அந்த சாதுக்கள் மிரண்டால் காடு மட்டுமல்ல ஏழேழு உலகமும் தாங்காது....
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...