மழை வந்தது! – (கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்)
மழை வந்தது!
(ஜனவரி 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்)
மாமழை போற்றுதும்… மாமரை போற்றுதம் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்ற மழை… இன்று தமிழக மக்களால் மாமழைத் தூற்றுதும் என்று வாங்கிக்

தீபாவளிக்குப்பிறகு தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை தொடர் மழையாகி… அடர் மழை யாகி… பெருமழையாய் பெயர் மாறி… பேரிட ராய் பெய்து ஓய்ந்தது. இந்த பேய் மழையில் (பேய் படங்களை வருண பகவான் பார்த்திருப்பாரோ) கடலூரின் பகுதிகள் காணாமல்
போயின• கரையோர மக்களின் வாழ்க்கை கரைந்து போனது. கூவம் தெளிந்து வழிந்தது. ஆனால் மக்கள் குழம்பித் தவித்தனர். செருக்குடன் இருந்த சென்னையின் வாழ்க்கை… செல்ல வழித் தெரியாத வெள்ளத்தால் சீர்க்கெட்டு போனது.

இத்தனை இழப்புகள், இடர்பாடுகள் உயிர்சேத ங்கள், பொருட்சேதங்கள் ஏற்பட்டாலும் கூட இந்த மழை நல்லது
தான்.

இயற்கையை சுரண்டி இருப்பிடமாக்கிக் கொ ண்டவர்களையும், விளை நிலங்களை வீடாக் கியவர்களையும், நீர்வழித்தடங்களை வழி மறித்தவர் களையும் அடையாளங் காட்டியி
ருப்பதால் இந்த மழை நல்லது. வருமுன்காப்போம் என்பதற் கு பதிலாக வந்த பின்பு பார்ப்போம் என்று மெத்தனமாக இருந்த அரசையும் அரசு அதிகா ரிகளையும் உறக்கத்திலிருந்து உதைத்து உட்கார வைத்திருப்பதால் மழை நல்லது.



பசியில் தவிப்பவனுக்கு தரும் ஒரு அங்குல ரொட்டியில்கூட படம்வருவதற்கு ஆசைப்பட்ட விளம்பர.. அரசியல்.. வியாபாரிகளைவெளிச்ச ம் போட்டுக் காட்டிய மழை நிச்சயமாய் நல்லது தான்.


மூழ்கியது நகரம், எழுந்தது மனிதநேயம், என்கிற உரத்த சிந்தனையை உலகிற்கு ஒரே நாளில் வெளிப்படுத்திய மழை நல்லதுதான்.

No comments:
Post a Comment