Tuesday, January 26, 2016

நீங்கள் எல்லோரிடத்திலும் இனிமையாகப் பழகும் அரிய மனிதராக வேண்டுமா?


ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வை த்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்றுவிநாடி கழித்து இழுத்த மூச்சை மெது வாக வெளியேவிடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்த க் கை மேலே உயருகிறது? அடி வயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதா ன். இதுதான் உண்மையாக மூச் சை இழுத்துக்கொள்ளும்மு றை.
எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல் களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சி ஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.
  
ஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினா ல்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப்பிடிப்பவ ர் விடும் மூச்சு நாற்றம் முதலியவ ற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கை யும் இறுக்கிப் பிடித்துக் கொள்கி றோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதி களுக்குச் செல் வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சி னால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர் களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளு ம் காய்ச்சல் வகைகளும் எட்டிப்பார் க்கும்.
பிராணாயாமம் மற்றும் மூச்சுப் பயி ற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமி டங்கள் மாலையில் ஐந்து நிமிடங்க ள் என தரையில் படுத்துக் கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொ ரு கையை அடிவயிற்றிலும் வைத்து க்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர்மேல் எரிந்துவிழ மாட்டீர்க ள்.
அடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலி ப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியா கமூச்சு விடத் தெரியாதவர்களுக் குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம். 
தரையில் படுத்துக்கொண்டு இப்ப டி ஆழ்ந்து சுவாசிக்கக்கற்றுக்கொ ண்டால் நுரையீரல்களின் கீழ்ப் பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாக மாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.
  
ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சு விடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கி றார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டு களை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக்கட்டினாலும் நன் கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிக ம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வே ண்டும்.
மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக் கொண்டால் மூளையையும் நம் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித்தன்மையும், காரத்தன் மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டு ம். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.
முதல் பயிற்சி :
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள்சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப் பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப் படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இரண்டாவது பயிற்சி :
சம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள் ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற் றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியே ற்றி கடைசியல் ஊ.ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.
மூன்றாவது பயிற்சி :
நன்குநிமிர்ந்து நின்றுகொண்டு இரண்டு கைகளையும் பக்கவா ட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலை க்குமேல் கும்பிடுவதுபோல் கைகளை வைத்ததும் அப்படியே மீண் டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படிகைக ளை இறக்கும்போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற் றுங்கள். இப்பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்து முறை செய்துவிட்டு புறப்பட்டா ல் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பா க இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்தி ருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமை யாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்று விடு வீர்கள்.
ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சு ப் பயிற்சியை அமெரிக்க டாக்டர் கள் பலரும் இருவேளைகள் செய் கிறார்கள். ரெய்கி மருத்துவத்தி ல் இந்த ஆழ்ந்த மூச்சுப்பயிற் சி முக்கியமான குணப்படுத்தும் உத் தியாக இடம் பெற்றுள்ளது.
எனவே, எளிமையான இந்த சக்தி வாய்ந்த மூச்சப் பயிற்சியை இன் று முதல் ஆரம்பியுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...