Tuesday, January 12, 2016

நம் வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத்தான சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது அது என்ன‌?

நம் வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத் தான சக்தி நமக்குள்ளேயே இரு க்கிறது அது என்ன‌?
எதை இழந்து, எதைப் பெறுகி றோம் என்பதை அறிந்து கொண் டால், தெளிவு ஏற்படும்
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை மூன்று வகையா கப் பிரிக்கலாம். முதலாவது, நம க்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளு ம் பிரச்னைகள். நம் பேராசையா ல், கோபத்தால், அவசர புத்தியா ல், தவறான முடிவுகளால் நாமே உருவாக்கிக்கொள்ளும் பிரச் னைகள் இவை. அடுத்து.. நம் நண்பர்களால், விரோதிகளால்,
நம்மைச் சுற்றியுள்ள நம்பத் தகாத மனிதர்களின் சேர்க் கையால் நமக்கு ஏற்படும் பிரச்னைகள். மூன்றாவதாக, எதிர்பாராத காரணங்களால், நம்மால் கட்டுப்படுத்தமுடி யாத சந்தர்ப்ப சூழ்நிலைக ளால் உருவாகும் பிரச்னைக ள். இதை விதி அல்லது கர்ம வினை என்று குறிப்பிடலாம்.
இவற்றில் முதல் இரண்டு வகை பிரச்னைகளிலிருந்து வெளிவர நமது விடாமுயற்சியும், தன்னம்பிக்கை யும் பெரிதும் உதவும். தவறுகளை நி னைத்து வருந்தி, திருத்திக் கொள்ள நி னைக்கும் மனப்பாங்கு இருந்தால், இ த்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ளு ம் மகத்தான சக்தி நம்முள் உண்டாகும். நண்பர், சுற்றம் என்ற பந்தத்தைத் துறந் து, தவறுக்குக் காரணமானவர்களை அ டையாளம் காட்டும் துணிச்சல் இருந்தா ல், இரண்டாவது வகை பிரச்னைகளுக் கும் ஓரளவு தீர்வு காணலாம்.
மூன்றாவது வகை வித்தியாசமானது. திடீரென சுனாமி வந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்து, உறவுகளுக் கும் உடைமைகளுக்கும் உண்டாக்கும் ஆபத்துக்குயாரைக்குறைகூறுவது? விதி அல்லது வினைப் பயன் என்று ஏற்று க்கொண்டு, போராடி ஜெயி த்து புது வாழ்வை அமைத்து க்கொள்ள, அளவு கடந்த தன் னம்பிக்கையும், வைராக்கிய மும், மன உறுதியும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும். ந மக்குள்ளே மறைந்திருக்கும் மகத்தான மானிட சக்தியை வெளிக்கொணர்ந்துதான் இ த்தகைய பிரச்னைகளைச் சமாளித் து, ஜெயிக்க வேண்டும்.
அத்தகைய நேரத்தில், ‘சூரியனின் ஒளி என் மேல் படுகிறது’ என்று எண்ணாமல், ‘சூரிய ஒளி என்னுள் ளே ஒளிர்ந்து கொண்டிருக்கி றது’ என்ற நம்பிக்கை உருவானால், பிர ச்னை இருளிலிருந்து வெளியே வர லாம்.
”நமக்குள் இருக்கும் மனோபலத்தா ல் ஆற்றும் சாதனைகள், நம க்கு வெ ளியே உள்ள சூழ்நிலையையே மாற்றி யமைக்கும்!” என் கிறார்ப்ளூடார்ச் எனும் அறிஞர். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் திருவள்ளு வர். ‘அச்சம் தவிர்’ என்று புதிய ஆத்திசூ டியில் சொன் னான் மகாகவி பாரதி. ‘துன்பம் கண்டு துவளாமல் எதிர்த்து நில். அப்போது, துன்பம் உன் காலடியி ல் விழுந்துவிடும்’ என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், பிரச்னைகளி ல் சிக்கித் தவிக்கும்போது இந்தப் பொ ன் மொழிகள் உதவிக்கு வருமா? அத ற்கும், ‘சொல்வது எளிது; செய்தல் அரிது’ என்று சொல்லி வைத் துள்ளார்களே ஆன்றோர்!
பிரச்னைகளை எப்படிச் சமா ளிப்பது என்று பக்கம் பக்க மாக ஆரா ய்ச்சிக் கட்டுரை எழுதி, அதைச் செய், இதைச் செய் என்று சொல்வது எளி து. என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பதைத் தெரிந் துகொள்வதும், அறிந்து நடப் பதும்தான் கடினம். நம்முள் ளே அடங்கியிருக்கும் உன்னதமான மானிட சக்தியைப் பற்றி நம் மில் பலருக்குத் தெரியும். ஆனால், பிரச்னைக ளைச்சந்தித்து, கவலையாலும் பயத்தாலும் வா டித் துவண்டிருக்கும் நிலையில், இந்தச் சக்தி யை எப்படி உணர்வது, எப்படி வெளிக்கொணர் வது என்பது தான் நம்மில் பலருக்குத் தெரிவதி ல்லை.
‘வழி தெரிகிறது; ஆனால், நடக்கக் கால்கள் இல்லை’ என்பது போன்ற நிலை இது. ஒரு சி ன்ன விதை அளவே நம்மை க் கருதுகிறோம். நமக்குள் ளே அடங்கியிருக்கும் விருட் சம் நமக்குத் தெரிவதில்லை.
காலம் காலமாக மனித வாழ்க்கையின் பிரச்னைகள் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே ஏற்பட்டன. பன்னெடுங்காலத்துக்கு முன்பு, சாதாரண மனிதனின் தேவைக ள் மிகக்குறைவு. ‘உண்பதுநாழி , உடுப்பது நான்கு முழம்’ என்ற ஒளவையார் மொழிக்கேற்ப, அவர்களின் தேவை சிக்கனமா க இருந்தது. போதுமென்ற மன மும் அவர்களிடம் இருந்தது. எ னவே, பெரிதாகப் பிரச்னைகள் ஏதுமில் லாதிருந்தது. ஆனால், இன்றைய மனிதனுக்கு அடிப்ப டைத்தேவைகள், வசதிகள், ஆடம்பரம் ஆகிய மூன்றையும் பூர் த்தி செய்து கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எது தேவை, எது வசதி, எது ஆடம்பரம் என்பது அவரவர் பொருளாதாரத் தரம் பற்றியதாக உள்ளது.
பரம ஏழை, ஏழை, நடுத்தர மக்களில் கீழ்த்தரம், மேல் தரம் என்ற பிரிவு, உயர்தர வகையில் சிறிய பணக் காரன் பெரிய பணக்காரன் என்றெல்லாம் பிரிக்கப்ப ட்ட நிலைகளில் வசதி, ஆ டம்பரம் ஆகியவை வித்தி யாசமான பரிமாணத்தில் உள்ளன. எனவே, இவற்றை அடைய முயலும்போது ஏற்படும் பிரச்னைகளும் வித்தியாசமான பரிமாணத்தில் உள்ளன.
‘ஏழை கூழுக்கு அழுகிறான்; பணக்காரன் பாலுக்கு அழுகிறான்’ என்று பழமொழி ஒன்று உண்டு. இரண்டு பேரும் அழுகிறார்க ள் என்பது உண்மை. இருவருக்கும் பிரச்னை கள் உள்ளன என்பதும் உண்மை.
இன்றைய உலகில் உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே மனித தேவைகளாக இல்லை. மாசு படிந்த உல கில், நல்ல காற்றுக்குக்கூட விலை கொடுக்க வேண்டியுள்ளது. மினரல் வாட்டர் எனப்படும் சுத்தமான தண்ணீ ரை விலைக்கு வாங்க வேண்டியிருக் கிறது.
உணவு என்று எடுத்துக்கொண்டால், எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக் கூடாது என்று தெரியாமல், வித்தியாச மான உணவுகளைச் சாப்பிடுகிற வழக் கம் வந்துவிட்டது. அதன் பின்விளைவு தெரிந்த பின்பு உடம்பு இளைக்க டயட் இருப்பது, உடற்பயிற்சிக் கூடங்களை நாடுவது, உடற்பயிற்சிக் கருவிகளை வா ங்குவதெல்லாம் அவசியத் தே வையாகி விடுகின்றன. இதற்கா ன நேரம், செலவு, அதனால் ஏற் படும் பிரச்னைகள் ஆகியவை த விர்க்க முடியாததாகி விடுகின்ற ன.
இன்றைக்கு லேட்டஸ்ட் ஃபேஷ ன் என்று எடுத்து உடுத்துகின்ற ஆ டைகள் அடுத்த மாதமே பழைய நாகரிகம் என்று கழிக்கப்படுகின் றன. சவரன் 23,000 ரூபாய்க்கு வந்தாலும், நகை வாங்கும் நாட் டம் குறையவில்லை. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? அதுதான் பிரச்னை.
அடுத்தது, வீடு. எப்படியாவ து சொந்த வீடு வாங்க வே ண்டும்; அப்போதுதான் சமு தாய அந்தஸ்து கிடைக்கும் என்ற ஒரு எண்ணம் எல் லோருக்குமே உண்டு.
கவர்ச்சியாக வரும் வீட்டு விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, தவ ணை முறையில் வீடு வாங்கும் அயராத முயற்சியும், விலை குறைவாகக் கிடைக்கும் எ ன ஆசைப்பட்டு அலுவலகத் துக்கு 60 கி. மீ. தூரத்தில் கூட சொந்த வீடு வாங்கும் ஆசையும் பலரிடம் தலை தூக்கி நிற்கிறது.
கணவனும் மனைவியும், ஏன்… மகனும் மகளும்கூட வேலை செய்து வீட்டுக் கடனுக்கான தவணைப் பணம் கட்ட வேண்டிய நிர் பந்தமாகிவிட்ட காலக் கொடுமை இன்றைக்கு!
இன்று, தினமும் அலுவல கம் செல்ல பஸ், ரயில் க ட்டணம், மற்றும் பிரயாண த்துக்காகிற காலம் ஆகிய வை மாறிவிட்டன. அதற் காக வாங்கும் கார், மோட் டார் சைக்கிள் வாகனத்து க்கான செல வுகள் வேறு!
தூக்கமின்மை, உடல் நலக்குறைவு, அதற்காகும் மருத்துவச் செலவுகள்… இப்படி அடுக் கடுக்காகப் பிரச்னைகள்!
வாழ்க்கை என்பது வியாபாரம். அ தில் எதை இழந்து, எதைப் பெறுகி றோம் என்பதை அறிந்துகொண்டா ல், தெளிவு ஏற்படும்; பல பிரச்னை கள் தீர்ந்துவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...