Wednesday, January 20, 2016

உங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்கள் செய்யக்கூடாதவைகள் – எச்ச‍ரிக்கை அலசல் உங்களுக்கு தொடர்ச்சியாக கழுத்து வலி இருந்தால் நீங்கள் செய்யக் கூடாதவைகள் – எச்ச‍ரிக்கை அலசல் தொடர்ச்சியாக அதிகநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அல்ல‍து அதிக நேரம் கணிணியில் பணிபுரிபவர்களுக்கு கழுத்து வலி என்பது வேண்டாத விரு ந்தாளியாக உங்களை வந்தடையும். அச்சமயத்தில் அதாவது உங்களுக்கு கழுத்து வலி எடுக்கும்போது நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்களை இங்கு காண்போம். கழுத்து வலி இருப்போர் செய்யக் கூடாதவை 1)கணிணியையோ அல்ல‍து தொலைக்காட்சியையோ மிகவும் உயரத்தில் வைத்து பார்ப்ப‍தோ அல்ல‍து தாழ்வாக வைத்து பார்ப்ப‍தோ கூடாது. தொலைக்காட்சியை மிகவும் அருகில் இருந்து பார்க்க‍க்கூடாது. கணிணி திரைக் கும் உங்களுக்கும் சுமார் 30 செ.மீ.-க்கு குறைவான இடைவெளி விட்டு பணிபுரியக்கூடாது. 2)எக்காரணம்கொண்டும் சுளுக்கு எடுப்ப‍தோ மசாஜ் செய்யச்சொல்வதோ கூடாது. மீறி செய்வதால் நரம்பு பாதிப்போ அல்ல‍து சதைத் தெறிப்போ ஏற்பட்டு தொடர்ச்சியாக கடுமை யான‌ வலி ஏற்படுத்தி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். 3) தொலைக்காட்சியை படுத்துக்கொண்டே பார்க்க‍ கூடாது. அதேபோல் படுத்துக்கொண்டே புத்த‍கம் படி க்கவும் கூடாது. கணிணியில் படுத்துக் கொண்டே பணிபுரியக்கூடாது. 4) உட்கார்ந்துக்கிட்டே உறங்குவதும் கூடாது. 5) தலையணை இல்லாமல் வெறும்தரையில் அல் ல‍து படுக்கையில் தலை வைத்து உறங்கக் கூடாது. 6) மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ள‍க் கூடாது. அப்ப‍டியும் கழுத்து வலி போகவில்லையா? அப்ப‍டின்னா நீங்க தாமதிக் காமல் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற் கொள்வது சாலச்சிறந்தது.

34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! – இன்று முதல்…

34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்! – இன்று முதல்…
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களில் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்கும் இன்றைய
பெண்களை, திரையரங்கம் பக்க‍ம் வரவை ழைக்கும் ஒரு புதிய முயற்சிதான் இம் முயற்சி
34வருடங்களுக்குமுன்பு அதாவது 1982 ஆம் ஆண்டு, எஸ்வி.சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா, விசு, கிஷ்மு மற்றும் பலர் நடித்து, இயக்குநர் விசு இயக்க‍த்தில் வெளிவந்து பெரு ம் வரவேற்பைப் பெற்ற படம் ‘மணல் கயிறு’.
ஒரு அருமையான குடும்பப் படமாக நகைச்சுவை கலந்து வெளிவந்த இப் படம் விசு இயக்கிய படங்களில் மிகவும் முக்கியமான படமாக அமைந்த து. 1980களில் குடும்பப் படங்களை இயக்கிய தாய்மார்களிடம் பெரும் வரவேற்புப் பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் விசு என்பது குறிப்பிட த்தக்க‍து.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. ‘யாருடா மகேஷ்’ படத்தை இயக்கிய மதன் குமார் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். விசு, எஸ்.வி. சேகர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கி றார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத் தைத் தயாரிக்கி றது.
34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் இத்தனை ஆண்டுகள் கழித்து உருவாக இருப் பதே பெரிய விஷயம்தான். கடந்த சில வருடங்களா கவே திரைப்படங்களில் நடிப்பதை மிகவும் குறைத் துக் கொண்ட விசு இப்படத்தில் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடிக்கி றார்.
தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகள் காணாமல்போய், அப்படிப்பட்ட கதைகள்டிவி சீரியல்களா க மாறிவிட்ட சூழ்நிலையில் மீண்டும் குடும்பப்பாங்கான படங்கள் வர ஆரம்பித்தால் டிவி முன்னால் இருக்கும் தாய் மார்கள் தியேட்டர்கள்பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கை யில் இந்தப் படம் உருவாகிறது.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...