Wednesday, January 6, 2016

நமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதியங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன
அவைகளில் சில………
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக் கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த இரசா யனத்தை சாதார ணக்கருங்க ல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலா தாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவி னால் அந்தப் பறைகள் பெடி ப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச் சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதி ல்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையா னாலும் உலோகத்தை உருக் கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில் லை. எந்த கருங்கல் சிலை யை எடுத்துக்கொண்டாலும் சுர சுரப்பாக இருக்கும். ஆனா ல் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வே லைப்பாடுகள் எல் லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கி ன்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவ ங்கள், நாகா பரணங் கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இரு க்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன் கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள் ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷே கம் செய்கிறார்கள். ஆனால், அபி ஷேகம் முடிந்தவுடன் ஏழுமலை யானுக்கு வியர்க்கிறது. பீதாம் பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொ திக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1.திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரிய தாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வ டை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெள காரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந் திரிப்பருப்பு கேசரி போன்ற வை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார் கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டா து. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசே கரப்படியைத் தாண்டச் செல்லா து. ஆண்டவனுக்கு நைவேத்தி யம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற் றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொ ண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தே வஸ்தான அலுவலகத்தில் 12500  ரூபாய் செலுத்த வேண் டும்.வாரத்தில் ஒரு முறை வெ ள்ளிக் கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவத ற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டண மாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செ லுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வே ண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பி க்கும் சீர் வஸ் திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத் தப்படு கிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேக ம் செய்ய இன்று கட்டணம் செலுத்தி னால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வே ண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத் திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலி ருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம் பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பா ல் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகி றது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆ கும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படு த்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தி ல் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக் கோலம் , இலவங்கம், குங்கு மம், தமாலம், நிரியாசம் போ ன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலு க்காக அனுப்பப்படு கின்றன.
10. ஏழுமலையானின் நகைகளி ன் மதிப்பு ரூ.1000 கோடி, இவ ருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனா ல் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித் தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12கிலோ எடை. இதை சாத்து வதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக் கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கு ம் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிட மும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோ ழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைக ளையும், அறக்கட்டளைக ளையும் செய்து அவற்றை கல்வெட்டு களிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப் போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறு நில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெரு ந்தேவி நகைகளைத்தந்து, பூஜை க்கு அறக்கட்டளையும் வைத்தா ர். முதலாம் குலோத்துங்க சோ ழன் திருமலை தேடிவந்து காணி க்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத் தப்படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற் சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமா னுக்கு வைரத்தில் விபூதி நெற்றி ப்படடை சாத்தப் பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப் பாக் கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்ம மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமா ன் திருப்பதிக் கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யா வும் சமகாலத்தவர் கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிற ந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ் திரம் தெரிந்தவர், நூற் றுக் கணக்கான தெய்வங்கள் மீது பாடி யுள்ளார். ஏழும யைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள் ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழு மலையான் தனது மூன்றாவது கண் ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலு ம் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சி லையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர் களால், வெறுங்கைவேடன் என்று அழைக்கப் பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப் படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமி ட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரி வை ச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குண மடைய ஏழுமலையானை பிராத்தித்திரு கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப் பாய் மூலம் நேர்த்திக் கடன் செலுத்தியிரு க்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட் டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கரு தி 1759 முதல் 1874 வரை எந்த ஆங் கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கி லப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பி னார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்க வில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங் கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜை கள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலை ப்பட்டார்கள்.
23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர் ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியி ல் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளி ப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழ மை அபிஷேகத்திந்கு பரிமள அறை யில் வியாழன் இரவு அறைத்து தயா ர் செய்யப் படுகிறது. குங்குமப்பூ கல வையும் அபிஷேகத்திக்கு சேர்கப் படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வா சனை திரவியங்கள் பக்தர்கள் அனு ப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வார த்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாச னை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியி ல் கலக்கிறது. ஆகவே இது புனி தமான நீராகும். இங்கே குளித்து விட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழி பாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகா லை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ” வேங் கடமெனப்பெற்ற” என்ற பாசு ரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்து முறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழு மலையான் திருமேனி யுடன் இருப்பார். முதலில் ஒரு தீபா ராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்க ப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்ப டும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப் படும். ஏழுமலையான் அந்த தீப ஒளி யில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப் பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயா ருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்ப வனின் தலைமையில் வந்த முஸ்லீம் படை களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள்இன்றை க்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக் கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழு மலை யானை கடவுளாக வழி பட்டு வாழ்த்தி வண ங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெ ட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் கால த்தவை. 169 கல் வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத் தவை. 229 கிருஷ்ண தேவராயர் கா லத்தவை. 251 அச்சுதராயர் கால த்தவை. 147 சதா சிவராயர் காலத் தவை. 135 கொ ண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்ல வர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுக ளில் 50 கல்வெட்டு க்கள் தான் தெலு ங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...