Monday, January 11, 2016

விடா முயிற்சி, தொடாதது எதுவும் இல்லை

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர்தோல்வி. தோல்வி நம் வாழ்க் கையின் ஒரு அங்கம். இந்த உல கத்தில் தோல்வியை சந்திக்கா தவர் எவரும் இல்லை. தோல் வி ஒவ் வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தரு கிறது. நாம் செய்யும் எந்த ஒரு விடயத்திலும் முழு வெற்றி பெற வேண்டுமானால் தோல் வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ் க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் எட்டாவது அதிசய மாகும்.
வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங் கள். ஒரு வெற்றியைப் பெ ற அவர் சந்தித்த தோல் விகள் ஏராளமாக இருக் கும். பட்ட அவமானங்க ளோ அதைவிட அதிகமா க இருக்கும். வெற்றி என் றால் என்ன என்பதை உங் களுக்குப் புரியவைக்க உத வும் ஒரு கருவியே தோல் வி. உங்களுக்கு மிகவும் பிடித்தமாக பத்து சாதனையாளர் களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அவ ர்களுடைய வாழ்க்கை வரலாறு புத் தகங்களை எடுத்து ஒவ்வொருவரு டைய வாழ்க்கையையும் கூர்ந்து படித்துப் பாருங்கள். இவர்கள் ஒவ் வொருவரும் எத்தனை முறை தோற்றிருக்கிறார்கள் என்பதை பட் டியலிடுங்கள். வாழ்க்கையில் தோற் காமல் சாதனை படைத்தவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது இப்போது உங்களுக்குப் புரியும்.
தோல்விகளைக் கண்டு பயந்து ஓடு பவர்களை தோல்வியானது தொட ர்ந்து துரத்திச்சென்று அழித்து விடும். தோல்விகளை துச்ச மென நினைத்து அதை எதிர்த்துப் போராடுபவன் எவனோ அவன் நிச் சயம் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். ஸ்கொட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்கொட் லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து  நாட்டிற்கும் இடையே கருத்து வேறு பாடு இருந்தது.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடி க்கடி போர் நடைபெற்றது. இதில் பல முறை இராபர்ட் புரூஸிற்கு தோல் வியே பரிசாகக் கிடைத்தது. இத னால் இராபர்ட் புரூஸின் ஆட்சி நிர ந்தரத்தன்மை இல்லா மல் இருந்தது. மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராப ர்ட் புரூஸை அழித்து தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிரு ந்தான். இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக் கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்த படியே இர ண்டு பேரையும் சமரசம் செய் யாமல் அவர்களையும் ஸ்கொட்லாந்து தேச த்தையும் மிகக் கேவலமாகப் பேசினான்.
எட்வர்டு மன்னரின் இத்தகைய கேவலமான பேச்சைக் கேட்கஇராவர்ட் புரூஸ் ஆத்திர மடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலா ந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம் முறையும் புரூஸிற்கு தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென் றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனை யுடன் கழிக்கலானான்.
ஒருநாள் அந்த குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின் னும் போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்த சிலந்தி ஆடிக் கொண்டிருந்தது. அந்த நூலிழையி னை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வே ண்டும். அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்த சிலந்தி இதற்காக பல முறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையை குகைச் சுவற்றில் ஒட்ட வை க்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திரு ந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட் டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந் தான்.
சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடை பெற் றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடர்ந்துபோராடி ஒரு கட்டத்தில் அது நூலி ழையினை சுவற்றில் ஒட்டி தனது வலையினை வெற்றிகரமாகப் பின் னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்ச ரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மன தில் ஒரு வெற்றி பிறந்தது. ஒரு சின் னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கி ருந்து உடனே புறப்பட்டுச் சென்று தனது படிவீரர்களை ஒன்று திரட்டி னான். இராபர்ட் புரூஸ் இங்கிலாந்து படையினை தோற் கடிக்க வேண்டும் என்றவெறியோடு போர் க்கள த்திற்குச் சென்றான்.
தனது வீரர்களை ஊக்கப்படுத்தி போர் நடத்தி னான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந் திக்கு வெற்றி கிடைத்தது போல இராப ர்ட் புரூ ஸின் தனது வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களை துரத்தி அடித்தான். வெ ற்றி வீரனாய் ஸ்கொட் லாந்து தேசத்தின் வலி மையான மன்னனாய் பதவி ஏற்றுக் கொண்டான்.
தோற்று விட்டோமே என்று கவலைப்பட்டு மனதைத் தளர விடா தீர்கள் வருத்தப்பட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதீர்கள்.விடுதலைப் போரில் காந்திஜி சந்திக்காத தோல் விகளா? அவமான ங்களா? அவர் மனஉறுதியோடு அனைத்தையும் எதிர்கொண்டதால் தான் இன்று நாம் அவரை தேசப்பிதா என்று அழைக்கிறோம்.
தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங் கள் குழந்தை களுக்கு வாழ்க்கையின் ஒரு அங்க மாக வெற்றியை மட்டுமே போதி க்கிறார்கள் மற்றொரு அங்கமான தோல்வியைப் பற்றி அவர்க ளுக்கு எடுத்துச் சொல்வதே இல்லை.இதன் காரணமாக எதிர் கால த்தில் அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது மனமுடை ந்து போகிறார்கள்.
தோல்விகளை எவ்வாறு எதிர் கொள்ளுவது என்பது அவர்களு க்குத் தெரியவில்லை. உடனே ஒரு விபரீதமான முடிவினை எடுக்கிறார்கள். அது தற்கொ லை தோல்விக்கு முடிவு தற் கொலைதான் என்று ஒவ்வொருவரும் தீர்மானித்திருந்தால் இந்த உலகம் இவ் வளவு வளர்ச்சி பெற்றிருக்குமா? இந்த உலகத்தில் ஒரு மனிதன் கூட மிஞ்சி இருக்க மாட்டான்.
ஒவ்வொரு கண்டுபிடிப்பிற் கும் பின்னாலும் பல தோல் விகள் ஒளிந்துள்ளன என் பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மின்சார குமிழி னை கண்டுபிடித்தவர் தோம ஸ் அல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
மின்குமிழ் எரிய முக்கியமான ஒரு பொருள் தங்ஸ்டன். மின் குமி ழில் தங்ஸ்டனை பயன்படுத்தினால் வெற் றி பெற முடியும் என்ப தை அவர் சுமா ர் ஆயிரம் முயற்சிகளுக்குப் பின்னரே கண்டு பிடித் தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனை த்தும் தோல் வியிலேயே முடிந்தன. இவ்வாறு ஆயிரம் தோல்விக ளுக்குப் பின்னரே தங்ஸ்டன் இழையினை மின் குமிழி ற்கு வைத்து சோதித்து வெற்றி கண் டார்.
அப்போது ஒரு நண்பர் அவரிடத்தில் கேட்டார். ஆயிரம் முறைதோல்வியைச் சந்தித்தீர்களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லை யா? நிச்சயமாக இல்லை. ஒவ் வொரு முறையும் ஒரு சோதனை யை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன். சாதனையாளர்கள் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாத காரணத் தினால்தான் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கி றார்கள்.
ஒவ்வொரு முறைதோற்கும் போது பெரியதொரு வெற்றி யை நோக்கி நீங்கள் பயணி க்கிறீர்கள் என்பதை உணருங் கள். பதினைந்தாவது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால் பதி னான்கு மாடிக ளைக் நீங்கள் நிச்சயம் கடந்துதான் ஆக வேண்டும். தோல்வி ப்படிகளை மெல்ல மெல்ல கடந்துதான் வெற்றியின் முகவரியை நீங்கள் அடைய முடியும். வெற்றியின் முகவரியை அடைய விரும்பினா ல் நிச்சயம் நீங்கள் தோல்விகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். தோற்றுப் பாருங்கள். அப்போதுதான் வெற்றியின் முக வரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத்தேடி வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...