Thursday, April 21, 2016

மோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தால் . . .

மோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தால் . . .
அந்தக்காலத்தில் நமது முன்னோர்கள், அதிகாலையில் கண் விழித்து பல் தேய்த்து, குளித்து விட்டு, முந்தினம் நீரில் ஊற வைத்த‍ சோற்றினை அதாவது பழதுடன் சேர்த்து
இரண்டு பச்சை மிளகாயை கடித்து சாப்பிடுவார்கள் அல்ல‍து வெறும்சாதத்துடன் மோர் கலந்து அதனுடன் பச்சை மிளகாயையும் சாப்பிடுவார் கள்.
ஆனால் காலப்போக்கில் பழைய சோறும் காணாமல் போனது.  பச்சை மிளகாய் காரத்தன்மைக்காகவும் சுவைக்காகவும் பெயரளவில் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதனை தூர எறிந்து விடும் பழக்க‍ம் ஏற்பட்டு விட்டது. 

ஏன் அவர்கள் பழைய சோறுடன் இரண்டு பச்சை மிளகாயை கடித்து சாப்பிட்டார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்த தற்போ தைய மருத்துவ உலகம், பச்சைமிளகாயில் உள்ள‍ ஒரு வித கேப்சைசின் என்ற‌ வெப்ப ஊட்ட பொருள் நமது உடலில் கலோரி களையும் கரைத்துவிடும் ஆற்றல் இதற்குண்டு. மேலும் இதனை உட்கொண்ட 30 நிமிடங்களி ல் நமது உடலில் உள்ள‍ தேவையற்ற‍ அபாயகரமான கொ ழுப்புக்களை கரைக்க‍ ஆரம்பித்து விடுகிறதாம்.
இந்த பச்சை மிளகாயை அப்படிய சாப்பிட்டால் அதன் காரத்தன்மை குடல் புண்ணாகி விடும்.. அதனால் பழைய சாதத்துடனோ அல்ல‍து மோர் சாதத்துடன் இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டு வந்தால், குடலும் புண்ணாகாது. உங்க எடையும் குறையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...