Thursday, April 28, 2016

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!!

‪#‎கிண்டர்‬ ஜாய் சாக்லேட்
இந்தியாவில் குழந்தைகள் கிண்டர் ஜாய் சாக்லேட்டை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வகை சாக்லேட் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது விட்டது. ஏனெனில் இதுவும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த தீங்கை விளைவிக்கிறது என்பதால் தான்.

#‎டி‬-கோல்டு டோட்டல்
.
இது மற்றொரு பிரபலமான சளி, இருமல் பிரச்சனைக்கு இந்திய மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் மாத்திரை. ஆனால் இந்த மாத்திரை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால்.
.
‪#‎ஜெல்லி‬ மிட்டாய்
.
இந்த வகையான மிட்டாய்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில் அங்கு இந்த வகை மிட்டாய்கள் தடைசெய்யப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் இந்த வகை மிட்டாய்கள் குழந்தைகளுக்கு தீவிர சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக பல ரிபோர்ட்டுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் இவை இந்தியாவில் ஏராளமாக விற்கப்படுகிறது.
.
‪#‎லைஃப்பாய்‬ சோப்பு
.
உங்களுக்கு ஒன்று தெரியுமா, நாம் பயன்படுத்தும் லைஃப்பாய் சோப்புக்களானது வெளிநாடுகளில் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தடை செய்யப்பட்டுவிட்டது. மேலும் வெளிநாடுகளில் ஒருசில மிருகங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவிலோ இதனை தான் நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறோம்.
.
‪#‎ரெட்‬ புல்
எனர்ஜி ட்ரிங்ஸ் என்று விற்கப்படும் ரெட் புல் பிரான்ஸ், டென்மார்க் போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இந்த பானமானது இதய நோய், மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியது என்பதால் தானாம். ஆனால் இந்தியாவில் இதனை நிறைய மக்கள் ஆற்றலை அதிகரிக்கும் என்று நினைத்து டப்பா டப்பாவாக வாங்கி குடிக்கிறோம்.
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...