Thursday, April 7, 2016

“நாம் சும்மா இருக்க முடியாது” – அப்துல் கலாம்


கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை அறிவியல்கல்லூரியில் யூத் மீட் -2011 நிகழ்ச்சி நடை பெ ற்றது. விழாவில் முன் னாள் ஜனாதிபதி அப்து ல் கலாம்கலந்து கொ ண்டு பேசினார்.
அவர் பேசியதாவது. :-
நான் கடந்த 10 ஆண்டுக ளில் 11 மில்லியன் இளைஞர்களை சந்தித்துள்ளேன். அதில் அதிகமான இளைஞர்கள் தனித் தன்மையுடன் விளங்க வே ண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு விளங்க வேண் டுமானால் உடனடியாக தனித்தன்மை கிடைத்துவி டாது. அதற்கு கடுமையாக போராட வேண் டும்.
மாணவர்கள் 4 திட்ட ங்களை மனதில் வை த்து செயல்பட வேண் டும். பெரிய அளவி லான குறிக்கோள், தொடர்ச்சியா ன அறிவு தேடல், கடின உழைப்பு, பொறுமை. இந்த 4 குறிக்கோளோடு செயல்பட்டால் தனித் தன்மையோ டு செயல் பட முடியும்.
தொலைபேசி கண்டுபிடித்த கிரகம்பெல், மின்சார பல்பு கண் டு பிடித்த தாமஸ் ஆல் வா எடிசன், டெல்லி மெட்ரோ ரெயில் திட் டத்தை கண்டுபிடித்தஸ்ரீதரன் போல் ஒவ் வொரு மாணவரிடமு ம் கண்டுபிடிப்பு எண் ணங்கள் வளர வேண் டும்.
2020 – ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என ஒவ் வொரு மாணவரும் ஆசைப்படுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரத்தில் முன்னேற ஒவ்வொரு மாண வரும் தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
பின்னர் அப்துல் கலா மிடம் 3 மாணவிகள் கேள்விகள் கேட்ட னர். அதற்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி:-நாம் காந்திய வழியில் செல்கிறோ ம். ஏன் ஆயுதம் தயா ரிக்க வேண்டும்.
அப்துல் கலாம் பதில்:- அண்டை நாடுகள் ஆயுதங்களை பெரி ய அளவில் தயாரித்து வைத்துள்ளது. நாம் சும்மா இருக்க முடியாது. நாமும் தயாரித்து வைத்து கொள்வோம். நாம் அதை முதலில் பயன்படுத்த மாட்டோம். பிற நாடுகள் தாக்கு தல் நடத்தும்போது பயன்படுத்தவே இந்த ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளோம்.
 
கேள்வி:- வெளிநாடுகளில் இருந்து யூரேனியம் கிடைப்ப தில்லையே?
அப்துல் கலாம்:– இந்தியாவில் தற் போது தேவையான அளவு யூரே னியம் உள்ளது. தட்டுப்பாடு இல் லை.
கேள்வி :- இந்தியாவில் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை கூடு தலாக உள்ளதே?
 
அப்துல் கலாம்:– பெண்கள் தான் அதிக அளவில் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னே றி வருகிறார்கள். செக்ஸ் கொடுமையை தடுக்க ஒவ் வொரு பள்ளியிலும் ஒவ் வொரு நாளும் சுமார் 1 மணி நேரம் நல்லொழுக்கத்தை கற் று கொடுக்க வேண்டும். இது வருங்காலத்தில் செக்ஸ் கொ டுமையை தடுக்க வழி வகுக் கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...