Saturday, April 23, 2016

“கோபத்திற்கு கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்போம்!”

‘கோபமாக இருக்கும் ஒவ்வொருநிமிடமும், அறுபதுவினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடு கிறோம்’என்கிறார் ரால்ப் வால் டோ.
ஆனந்தமும் கோபமும் எதிர் எதி ர் துருவங்களில் வேர்விட்டு அமர் ந்திருப்பதை அவருடைய வார்த் தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதி
சயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப்போன்றது. சாதிமத நிற பேதமில்லாமல்எல்லோருக்குமே வரும். சி லரிடம் ‘நீங்க அடிக்கடி கோ பப்படுவீங்களாமே?’ என்று கேட்டால்கூட எவண்டா அப் படிச் சொன்னது?’ என கோப ப்பட ஆரம்பித்து விடுவார்க ள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்றுண்டு. ‘வரையறுக்கப் பட்ட, கட்டுக்குள் இருக்கக்கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல்இல்லாமல்வளர்கிறது எனில் உங்களு க்குக்கோபம் எழும். அந்தகோபம் கத்தலாகவோ, சண்டையாக வோ இல்லாமல் வரையறுக்கப் பட்ட நிலையில் வெளிப்படும் போது வழிகாட்டும் அறிவுரை யாய் மாறி விடு கிறது.
‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன் னிக்கு வேலையை முடிக்கலே ன்னா சிக்கல் பெரிசாயி டும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.
ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பே சும் கோபம் எந்த இடத்திலு ம், எந்தச் சூழ லிலும் கொ ண்டாடப்படுவதில்லை என் பதே உண்மை.
கோபத்தை ஒரு மிகப்பெரி ய கோடு கிழித்து இரண்டு பாக மாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ எப்படிய்யா என் மனைவி யைப் பற்றி தப்பாப் பேசலா ம்’ எனநரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக் ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என் பார்கள்.
இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எ திராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல் வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டா மல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்கு ள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப் ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
எந்த வகைக் கோபமாக இருந்தாலு ம் அது நமது உடலையும் மனதையு ம் ஒருகை பார்க்காமல்விடாது என் பதுதான் உண்மை. சண்டை, அடித டி, பிரிவுகள், தோல்வி, உடல் பல வீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படை யில் இந்த கோபமே பதுங்கிக் கிடக் கிறது.
மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதி கள், வலிப்பு என பல நோய் களுக்கும் கோபமே அடிப்ப டையாய் இருப்பதாய் மருத்து வம் நீட்டும் பட்டியல் எச்சரிக் கிறது.
அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒருபடி மேலே போ ய், நோய்கள், காயங்கள் போ ன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோப மே என்கிறது.
கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக்கைதி களின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆ வேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்ப தாய் நினைத்துக் கொண்டோ பலரும்சிறைச்சாலைக்கு வந் துவிடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோப ம் கொண்டு மிச்ச வாழ்க்கை யைக் கண்ணீரின் கரைகளில்வாழ்ந்து முடிக்கிறார்கள்.
இருபத்து ஆறு ஆண்டுகள் சி றையில் வாடிவிட்டு வெளி யே வந்தபோது நெல்சன் மண் டேலாவுக்கு சிறை அதிகாரிக ளின் மீது கடுமையான கோப ம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளி ச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவ குறிப்புகள் பேசுகின் றன.
உறவுகளுக்கு இடையேவரும் பிள வுகளும் கோபத்தின் குழந்தைக ளே. `கொஞ்சம்அவசரப்பட்டுட்டே ன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமா ய் நடந்திருக்க வேண்டும்’ என்றோ தான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.
கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவ து, நான் சொல்வதே சரி யென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.
அலுவலகத்தில் வெற்றி யைத் தட்டிப்பறிப்பதும், புரமோஷனைக்கெடுப்பதும் பல வே ளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம்கோபப்படாம இருந்திருக்க லாம்… ’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அ லுவலக வராண்டாக்களில் உலவித்திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.
மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின்கணக்குகள் எண்ணிலடங்காதவை.
கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண் டு பக்கங்களைப் போன்ற வை. நான் செய்வதும் சொல்வதும்சரியானவை, மற்றவர்கள் செய்வது தவ று எனும் புள்ளியிலிருந் தே பெரும்பாலான கோப ங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வே ண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கு ம் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள்காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்க ளும் போதித்துச் செல்கின்ற னர்.
‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ் சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திரு ப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கிய மான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எ ங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதி ல்லை. அடுத்தடுத்த இடங்களி ல் அது தொடர்ந்து, அந்த கோப ம் மறையும் வரை நாம் செய்யு ம் செயல்கள் எல்லாவ ற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிற து என்பதே அது!
நான் ஒரு கோபக்காரன் என்ப தைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வத ன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணம டைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொ ண்டால், `இந்தக் கோபத் துக்குக் காரணம் நான் ம ட்டுமே. நான் நினைத்தா ல் இக்கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டு ப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்த…
கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வே று வழிகளை பலரும் பரி ந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படை யில் கிடைக்கும் சில பரிந்துரைக ள் இவை…
1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட் டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்தஉண்மை நிலையைப் புரி ந்து கொள்வது தேவைய ற்ற கோபங்கள் எழுவதை த் தவிர்க்கும்.
2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். ‘ இன் னா செய்தாரை ஒறுத்தலு ம், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண் டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய் யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தே ன்’ என பார்வையை மா ற்றுவதே இதனடிப்படை.
3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீ ர்கள். கோபம் உடனுக்கு டன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என் றே ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ளுங்கள்.
4. கோபம் வந்தவுடன் அதை உணர் ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற் றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கன வில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன் று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்க ள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர் களுடன் உங்களின் சக வாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
6. நமக்குப் பிடிக்காதவர்களை ப்பற்றிய சிந்தனைகளைக் கொ ஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்க ள், அவர்கள் செய்த நல்ல வி ஷயங்கள் இவற்றைப் பற்றியு ம் அடிக்கடி அசை போடுங்கள்.
7. சிரிக்கப்பழகுங்கள். நகைச்சு வை நூல்களை வாசியுங்கள் . மற்றவர்களோடு சிரித்து மகிழ் ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வே தியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
8. இப்போது கோபத்தைத் தூண் டிய இச்செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செ ய்யுமா என யோசியுங்கள். டிரா பிக்கில் கத்துவதும், வரிசையி ல் ஒருவர் புகுந்தால் எரிச்சல டைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
9. இந்தச் செயல் உங்கள் மீது தி ட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர் கள்? இதே தவறை நீங்கள் செய் தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா எனயோசியுங் கள். பெரும்பாலான கோபங் கள்காணாமல் போய்விடும் .
10. மனதார மன்னியுங்கள். இ ந்த ஒரே ஒரு பண்பு உங்களிட ம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெ ல்லவும் முடியும் பிளாஸ்டிக் எமன் விழிப்புணர்வு தகவல் !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...