Friday, April 22, 2016

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற எந்தக்காலத்தி லும் செய்யக்கூடாத, செய்ய‍ மறுக்க‍வேண்டிய செயல் கள் உண்டு. அந்த செயல்களை
வெற்றியாளர்கள் ஒரு போதும் செய்ய‍ மாட்டார்கள் அதனால்தான் அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடிந்தது  
வெற்றியாளர்கள், எப்போது மே  எதைச் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்று தான் பார்ப்போம். ஆனால் பல செயல்களை அவர்கள்செய்யாமலே விட்டுவிடுவார்கள். அவை எவை என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1. பணத்திற்காக வெற்றி பெற வே ண்டும் என எண்ண மாட்டார்கள்
பெரும்பாலான வெற்றியாளர்கள் பணத்தினை வெற்றி யாகக் கருதியதே இல்லை. மன அமைதி அல்லது மற் றவர்களுக்கு உதவுவதைத்தான்அவர்கள் வெற்றியாகக் கு றிப்பிடுகின்றனர். அவர்கள் பணத்தினை வாய்ப்புகளை த்தரும் கதவாகவும், சில வேளைகளில் சுகம் தரும் பொருளாகவும் மட்டுமே கருதுகின்றனர். பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சம்ப ந்தம் இல்லை என அவர்கள் நம்புகின்றனர்.
2. திட்டமிடாமல் ஒரு நாளை தொடங்குவதில்லை

ஒவ்வொரு நாளையும் எப் படி பயன்படுத்த வேண்டும், அதற்கான திட்டமிடல்களா க எவற்றை செய்ய வேண் டும் என அவர்களுக்கு நன் றாகத் தெரிந்திருக்கும். அன்றைய நாளில் செய்ய வேண்டிய செயல்கள் அனை த்தையும் ஒரு பட்டியலாக வைத்திரு ப்பார்கள். அத னை எந்த வரிசைப்படி செய்ய வேண்டுமெனவும் முன் கூட்டி யே தீர்மானித்திருப்பார்கள்.
3. ‘முழுநிறைவு’ என எதையும் இலக்காக கொண்டிருக் க மாட்டார்கள்

‘அய்யய்யோ நான் இதை முடித் தே ஆக வேண்டும்’ என்று அவர் களின் மனம் அவர்களை வருத் தாது. முழு நிறைவினை பெறுவ தற்கான பசியினைக் காட்டிலும், இதுவரை செய்த செயல்களில் தவறுதல்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்துவ தில் அவர்களின் கவனம் சற்று அதிகமாக இருக்கும். வெற்றிக் கான செயல்களின் ஒவ்வொரு நிறுத்தத்திலும், தங்களது வளர் ச்சிக்கான செயல்முறை குறித்து ஆய்வு செய் வார்கள்.
4. ‘நெகடிவ்’ பேச்சாளர்களின் கூட்டத்தில் இருக்க மாட்டார்கள்
எந்த செயல் எடுத்தாலும் இது நடக்காது, இது உருப்ப டாது என்று கூறுவதற்கென்றே ஒரு குழு எப் போதும் நம்மைச் சுற்றி இருந்தால் நாம்செய்யும் செயலின் மீதான நம் பிக்கை மிகவும்குறைவாக மாறிவிடும். இதனால்தான் அத்தகைய ஆட்கள்இருக்கும் கூட்டத்தில் வெற்றியாளர்க ள் இருப்பதே இல்லை. அவர் களை இலக்கினை நோக்கி உற்சாகப்படுத்துபவர்கள் எங் கு இருக்கிறார்களோ, அங்கு தான் இவர்களும் இருப்பார்க ள்.
5. கஷ்டங்களை பிரச்சனைகளாக எண்ணமாட்டார்கள்

வெற்றியை நோக்கிச் செல்லும் போது கண்டிப்பாக பல தடை கள் வரும் அவற்றையெல்லாம் பிரச்சினைகளாகக் கருதினால் இலக்கினை அடைய முடியாது. அதனால்தான் எல்லாத் தடைகளையும் தங்களை வலு ப்படு த்த வந்த வரப்பிரசாதமாக எண்ணுவார்கள்.
6. தோல்வியால் துவண்டு விட மாட்டார்கள்
ஒவ்வொரு தோல்விலும் துவ ண்டுவிடாமல், அந்த தோல்வி யில் இருந்த தங்களைப் பற்றிய குறைகளைக் கண்டறிந்து கொ ள்ள முயற்சி செய்வார்கள். தோல்வியும் வெற்றிக்கான பாதையில் உள்ள கற்கள், அவற்றைக் கண்டு பயந்தா ல் இலக்கினை அடைய முடியாது என் பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
7. பிரச்சனைகளால் கீழே விழுந்தாலு ம் வருத்தப்பட மாட்டார்கள்
ஒரு பிரச்சனையின்போது அதிலே தொடர்ந்து சிந்திப் பதால்தான் ஒரு பிரச்சனை பல பிரச்சனைகளாக மாறத் தொடங்குகிறது. உங்கள் எண்ணங்களையும், கவனத்தையும் ஒன்று சேர்த்து உங்கள் செயலில் இறங்குங்கள். உங்கள் கவனம் பிரச்சனை யிலிருந்து மாறும்போ து, அதில் தோல்வி ஏற்பட்டாலு ம் வருத்தப்பட மாட்டீர்கள். இதை த்தான் வெற்றியாளர்களும் செய் கின்றனர்.
8. தங்களின் சுயமரியாதையினை மற்றவர்கள் தீர்மா னிக்கும்படி விட்டுக்கொடுக்கமாட்டார்கள்

மற்றவர்களின் வார்த்தைக ளினாலோ அல்லது செயல் களினாலோ தங்களுக்கு சுய மரியாதை கிடைக்க வேண்டுமென அவர்கள் எண்ணமாட்டார்கள். தாங்கள் எந்த நிலையில் இரு க்கிறோம், தங்களின் மதிப்பு என்ன என்பது அவர்களு க்குத் தெரிந்திருக்கும். மற்றவர் களிடம் தங்களது திற மையினை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்போதும் இருக்காது, அத்துட ன் தனக்கென தானே வகுத்துக் கொண்ட வழிமுறைகள் இவர்க ளை எப்போதும் திருப்தியடைய ச் செய்யும்.
9. சாக்கு-போக்கு சொல்லமாட்டார்கள்

தங்களின் தவறுதல்களுக்கு தாங்கள்தான் காரணம் என் பதை எந்தவித ஒளிவு மறை வுமின்றி ஏற்றுக் கொள்வார் கள். அவர்கள் நினைத்தது கை கூடாத நேரங்க ளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்களே பொறுப்பேற்றுக்கொள் வார்கள். அத்துடன், இலக்கு பெரியதாக இருந்தாலும்,சிறியதாக இருந்தாலும் அ தை குறித்த நேரத்தில் முடி க்க வேண்டுமென எண்ணு வார்கள். அப்படி நிறைவே றாத காலங்களில் எந்த சா க்கு-போக்கினையும் அவர் கள் முன்வைப்பதில்லை.
10. அடுத்தவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமை ப் பட மாட்டார்கள்

நாம் அடைய முடியாத இல க்கினை மற்றவர்கள் அடை யும்போது பொறாமை வரு வது மனித இயல்புதான். என்றாலும், மற்றவர்களுக் கு நம்மைப்போல் பிற திற மைகள் இருக்கும் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இதை மனதில் வைத்துதான், மற்றவர்கள்வெற்றி பெற்றால் அதை உத் வேகமாக எடுத்துக் கொண்டு முன்னேற நினைப்பார்கள் வெற்றியாளர்கள். அவர்க ளைக்கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்.
11. தங்களுக்கு அன்பு கொடுப்பவர்களை புறக்கணிக்க மாட்டார்கள்

வேலை எவ்வளவு முக்கி யமானதாக இருந்தாலும் நம்மை விரும்புபவர்களா ன குடும்பம், மனைவி மற் றும் நண்பர்கள் வேலையி னை விட முக்கியமானவர்கள். இந்த அன்பு நம்மை இலக்கினை நோக்கிக் கொண்டு செல்வதிலும் முக்கி யப்பங்கு வகிக்கும்.

12.வேடிக்கையினை வேலைக ளை தவறவிடுவதில்லை
வேடிக்கையில்லாத வேலைஎரிச் சலை ஏற்படுத்தி விடும். ஆண்டி ல் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வேலை செய்ய நாம் கடவுள் படைத்த இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள்!. நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்தாற்போல் இரு ந்தால்தான் நம்மால் தொடர்ந்து வேலை செ ய்யமுடியும். இப்படி வே லைகளை பிடித்தாற் போல் மாற்றுவ தற்கு வேலை மற்றும்பொழு து போக்குகளை சம அளவில் வைத்திருக்கவேண்டும். அதனால் பொழுதுபோக்குகளை வெற்றியாளர்கள் எப் போதும் ஒதுக்கியதே இல்லை.
13.உடலை அதிகம் துன்பப்படுத்த மாட்டார்கள்
உடல் உழைப்பு இல்லாமல் வெற் றி பெற முடியாது என்றாலும், ந மது உடலை கவனிக்காமல் வெ றும் வேலையினைப்பார்த்து இல க்கினை அடைவதால் ஒரு பயனும் இல்லை. இதனா ல்தான், இலக்கினைப் பற்றிய வே லைகள் ஒருபுறம் நடந்தாலும், தங் களது உடலையும் அவர்கள் பேணி க்காத்துக்கொள்கின்றனர்.
14. வீண் இலக்குகளை வைக்க மாட்டார்கள்
ஏதாவது இலக்கு வேண்டும் என்பதற்காக, வாழ்க்கைக் கு சம்பந்த்ம் இல்லாத இலக்குக ளை வைக்க மாட்டா ர்கள். தங்கள் கனவு இலக்கிற்கு தகுந்தாற் போ ல் சிறு இலக்குகள வகுத்து பெரிய இலக்குகளைஅடைவார்கள். தான் வாழ்க்கையில் இருக்கும் தற்போ தைய நிலை குறித்து அவர்களு க்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
15. வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள்
வெற்றியாளர்கள் வெறும் பேச்சினை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்ல, பேசியபடி செய்தும் காட் டக் கூடியவர்கள். அவர்கள் சொ ன்னால் கண்டிப்பாக செய்து காட்டுவார்கள், அவர்களை நம்பலாம் என்று மற்றவர்கள் கூறும் அளவிற்கு தங்க ளது வார்த்தைகளின் மீது பற்று கொண்டிருப்பார்கள்.
16. மற்றவர்களால் தாங்கள் பாதிக் கப்படுவதை அனும திக்கமாட்டா ர்கள்
தங்களின் எண்ணங்களுக்கு அல் லது இலக்கிற்கு ஒவ்வாமல் இரு ப்பவர்களிடம் இருந்து வெற்றியா ளர்கள் விலகியே இருப்பார்கள். தங்களின் பாதையில் முன்னேறிச் செல்வது மட்டுமே தனக்கு மகிழ்ச் சியைத் தரும் என எண்ணவார்கள். மற்றவ ர்கள் செய்யும் செயல்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு நடந்துகொள் வார்கள்.
17. கடந்தகாலத்திலேயே நிலைத்திருக்கமாட்டார்கள்
கடந்தகால பிரச்சினைகளை சுமப்பதா ல் தங்களது வேலைப்பளுவும், பொறுப் புகளும் அதிகரிக்கும் என்று வெற்றியா ளர்கள் கருதுவார்கள். அதனால்தான் பழைய வலிதரும் காலத்தினை மறந்து விட்டு தற்கால மகிழ்ச்சிக்குத் தேவை யான வேலையினை செய்வார் கள்.
18. மாற்றங்களை தடுப்பதில்லை
‘மாற்றம் ஒன்றுதான் மாறா தது’ என்பதைப் போல் தங் களின் திட்டங்கள், வழிமு றைகள் மற்றும் செயல்பா டுகள் எப்போது வேண்டுமா னாலும் மாறாக்கூடும், அத னால் அத்தகைய மாற்றங் களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்களே தவிர, அவற்றினை தடுக்க மாட்டார்கள்.
19. ஒருபோதும் கற்றுக் கொள்வதை விட மாட்டா ர்கள்
எத்தனை வயதானாலும் தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் இ ருக்கிறது என எண்ணுவார்கள். எவருக்குமே அனைத் தும் தெரிந்திருக்காது, ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து எதையாவது கற்று க் கொண்டுதான் ஆக வேண்டும் என்று அவர்களுக்குத்தெரியும் .கற்றுக்கொள்வதற்கான தன து மனநிலையினை எப்போது ம் ஆயத்தமாக வைத்திருப்பார்கள்.
20. நன்றியில்லாமல் நாட் களை முடிக்கமாட்டார்கள்
தனக்கு கிடைத்த ஒவ்வொ ன்றிற்கும் நன்றி கூறுவார் கள். இதை தங்களுக்குள் ளே கூறிக்கொள்வார்கள். இந்த நன்றி தனக்கு உதவியவர்கள், தன்மீது அன்பு செ லுத்தியவர்கள் மற்றும் அன்றைய நாளினை சிறப்பா ன நாளாக மாற்ற உதவியவர்கள் என யாராகவும் இருக்கலாம். இந்நாளின் இறுதியில் மனதால் கூறப்படும் நன்றி , மன அமைதியையும், உறுதியான எ ண்ணங்களையும் கொடுக்கவல்லது.
இவையனைத்தும் உங்களுக்கும் பய ன்படும் செயல்முறைகள்தான். இதில் உங்களுக்குப் பொருந்திய செயல் முறைகளை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வும் பிரகாசம் பெறும்.

1 comment:

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...