Saturday, April 30, 2016

கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.






தட்டெழுத்து பயின்றவனுக்கு அவனுடைய இயல்பான கையெழுத்து மறந்துவிடும்.
கால்குலேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தால் அடிப்படைக் கணக்கே மறந்துவிடும்.
படிக்காத கிராமத்தாரிடம் மென்மையான ஆழமான புத்திசாலித்தனம் இருக்கிறது.
இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பெரிய தீங்கை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்மை எப்போதும்
அடிமைத் தனத்திலும், பேராசையிலும்
திருப்தியற்ற நிலையிலும்,
போட்டியிடும் நிலையிலும்,
அன்பற்றும்,
எப்போதும் கோபத்துடனும்,
வெறுப்போடும்,
ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ நினைக்கும் நிலையிலும் வைத்திருக்கவே சமூகம் ஆசைப்படுகிறது.
நம்முடைய அறிவுக் கூர்மை அழிக்கப் படுகின்றது.
அதிகம் படித்தவர்களால் இந்த உலகம் அபாயத்தில் இருக்கிறது.
நம்மைச்சுற்றி சற்று உன்னிப்பாகக் கவனித்தால் நாம் நன்கு அறியமுடியும்.
ஏன் இவ்வளவு பேர் சோர்வாகவும், அலுப்பாகவும்,
இன்னும் மீதி நாட்களை எப்படி ஓட்ட வேண்டும் என்று விரக்தியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?
ஏன் இந்த மரங்களைப் போல
புத்துணர்வுடன் வாழக் கூடாது?அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
ஒவ்வொரு மனிதனும் வேறு ஒருவரைப் போலவே இருக்க விரும்புகிறான்,
முயற்சிக்கிறான்...
அதனால்தான்
இவ்வளவு சோகம்,
சோர்வு,
துன்பம் எல்லாம்!!
ஒரு புத்தி கூர்மையுள்ளவன் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கவலைப்பட மாட்டான்.
அடுத்தவன் வாழ்க்கைமுறையை பற்றியும் கவலைப்பட மாட்டான்.
ஏன்? கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.
அவன் இங்கே.. இந்த தருணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான்.
அதைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது.
கடவுள்,
ஆத்மா,
சொர்க்கம் எல்லாம் தானே அவனை வந்தடையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...