Saturday, April 30, 2016

மேட்டுர் அணை வரலாறு நமக்கு தெறிந்ததும் தெறியாததும் :



மேட்டுர் அணை வரலாறு நமக்கு
தெறிந்ததும் தெறியாததும் :
............................................................
நமக்கும் நம்தலைமுறைக்கும்
சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர்தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்
ராயல்என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
இன்றைக்கு 48 ஆயிரம் கோடி
ரூபாய்கொட்டினால் கூட கட்டமுடியாத
பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த
அணையை அன்றைக்கு 4 கோடியே 80லட்சம் ரூபாய் திட்டத்தில்
கட்டி முடித்துள்ளனர்.மலைக்க வைக்கும்
மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.
மேட்டூர் அணையைஇதுவரை இரண்டு முறை மின்னல்தாக்கியது.
இருப்பினும் அணைக்கு
எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
தமிழகத்தில் காவிரி கரையோரமாக
நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக்கூடிய ஆட்களும் இருந்தும் போதியநீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை.
இதைஉணர்ந்த ஆங்கிலேயே அரசு
காவிரியின் குறுக்கே அணை கட்ட
முடிவு செய்து இடத்தை தேடியது.
15 ஆண்டுகள் கழித்து அன்றைய
ஆங்கிலேய அரசின் சென்னை மாகாணகவர்னர் ஸ்டான்லி காவிரியின்குறுக்கே அணைக் கட்ட
உத்தரவிட்டார்.
இந்த உத்திரவை போட்ட கவர்னர்
ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர்
அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.
இந்தஅணையில் கடல் போல காட்சியளிக்கும்அளவுக்குதண்ணீர் தேக்கப்பட்டது.அணையை கட்டிய
பொறியாளர்டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை
மேட்டூர்அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார்.
இனி என்றும்புகழப்படுவார்.
இந்திய அளவிலான
பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்சநீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத்தேக்கலாம்.
அதன் பிறகு ஓடிவரும் நீர்
வரத்து யாவும் உபரியாக
அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும்அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும்அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ
ஒருக்காலும் ஊறுவிளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர்
அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்:
21.8.1934
அணைக் கட்ட ஆன செசலவு 4.80
கோடி.
அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின்அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு
உயரம் 120 அடி
அணையின் நீர்பிடிப்பு
பரப்பளவு 59.25 சசதுர மைல் 2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.
அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம்,நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை,திருவாரூர்,
நாகப்பட்டனம் என மொத்தம்11 காவிரிப்
பாசனப் பகுதிமாவட்டங்களுக்கு மேட்டூர்
தண்ணீர் போகிறது.
மொத்தம் 16 லட்சம் ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அது மட்டுமல்லாமல், மேட்டூர்
அணையை நம்பி 4000 மீனவர்கள்
குடும்பங்களும் உள்ளன.
மேட்டூர்அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோமீட்டர் தூரம் செல்கிறது.
இதன் கிளை நதிகளாக கொள்ளிடம்,
பொன்னியாறு,கல்லணை கால்வாய்,
வெட்டாறு,வெண்ணாறு, குடமுருட்டி என்ற
பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர்தூரம் செல்கிறது.
இதை தாண்டி, 1904
கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால்
மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.
இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும்
வகையிலும்,பல்வேறு மாவட்ட
மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும்
,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண்,மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை
என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து
கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்
லீசை, அணையும் நம் மனசும்
நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு
கூர்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...