Sunday, June 5, 2016

நாட்டுக்குத் தேவை !

இன்று இந்தியாவிற்கு உடனடியாக தேவைப்படுவது, தானிய சேமிப்பு கிடங்குகள் ! ஸ்மார்ட் சிட்டிகள் அல்ல ! 
தனிமனித விருப்பங்களை நிறைவேற்றிட அரசு திட்டங்கள் அமையக் கூடாது. பொது மக்களின் அடிப்படைத் தேவை நல்ல உணவு ! உணவுத் தானியங்களை மிகுந்த பாதுகாப்புடன், கையாள வேண்டும் என்பது, அரசுக்கு தெரியாதா ? 
ஆயிரக்கணக்கான டன்கள், தானியங்கள் போதிய சேமிப்பு கிடங்குகள் இன்றி பாழடிக்கப்படுகிறது ! 70% ஏழைகள் வாழும் ஒரு தேசத்தில், மூன்று வேளை நல்ல உணவு கிடைக்காத மக்கள் வாழும் ஒரு தேசத்தில் போதிய சேமிப்பு கிடங்குகள் இன்றி, உணவுத் தானியங்கள் பாழடிக்கப்படுகிறது என்றால், அரசு நடத்துபவர்களுக்கு திறமை இல்லை, என்றுதானே பொருள் !!!
சோமாலியாவைச் சற்று நினைத்துப் பாருங்கள் !!!
மக்களைப் பட்டினிப் போடும் நாடு வல்லரசாக மாறுகிறது என்பது சுத்த பிதற்றல் !

தனிமனித ஒழுக்கமற்ற சாமியார்கள் கால்களில் விழுபவர்கள், அவர்களுக்கு அரசு செலவில் செக்யூரிட்டி பாதுகாப்பு தருபவர்கள், மடங்களில் ஆலோசனை கேட்பவர்கள், பகுத்தறிவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி சிந்திக்கலாமே !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...