Sunday, June 5, 2016

எங்கள் தமிழன் சிவதாணு பிள்ளை.

இஸ்லாமாபாத்தில் இருந்து டெல்லியை 5 நிமிடத்தில் தாக்குவார்களாம். அது எப்படி 680 கிலோமீட்டரை வெறும் 5 நிமிடத்தில் தாக்க முடியும்...?
அதாவது மணிக்கு 8500 கிலோ மீட்டர் வேகம் செல்லும் ஒரு ஏவுகணையோ ஜெட் விமானமோ இருந்தால் தான் இது சாத்தியப்படும். அந்த வேகத்தில் ((hypersonic speed) செல்லும் ஏவுகனையோ விமானமோ இதுவரை உலகில் இல்லை.
இது வரை உருவாக்கபட்ட ஆயுதத்திலே மிக வேகமாக மணிக்கு 3400 கிலோமீட்டர் வேகம் செல்லும் ஏவுகணை (supersonic) உலகிலேயே நம்மிடம் தான் பிரம்மோஸ் என்ற பெயரில் உள்ளது.
அந்த Hypersonic ஏவுகணையின் வேக மணிக்கு 6000 to 12000 கிமி வேகம் செல்லும் ஆயுதம் பரிசோதனை அளவில் தான் உள்ளது.
உலகின் Hypersonic speed ஏவுகணையை பெறப் போகும் முதல் நாடு இந்தியாவும் ரஷ்யாவும்.
ஏவுகணை பெயர் பிரம்மாஸ் -2-.
பெறப்போகும் வருடம் 2017.
அதை சிந்தனை வடிவம் குடுத்தவர்....
எங்களிடம் இருந்து மரணம் என்ற பெயரில் தொலைதூரம் சென்றாலும் தேச பக்தியுடைய மக்கள் மனதில் ஒரு குறையில்லாமல் வாழும் எங்கள் அப்துல்கலாம் ஐயா அவர்கள் வடிவம் கொடுத்தார். அதை உருவாக்குபவர் எங்கள் தமிழன் சிவதாணு பிள்ளை.
இந்தியாவின் அனைத்து ஆயுத வடிவமைப்புகளும், ராணுவ திட்டங்களும் சைனாவை தோற்கடிக்கும் நோக்கிலே உருவாக்கப்பட்டு வருகின்றன.
சீனாவும் இந்திய தொழில் நுட்ப ஆயுதங்களை பார்த்து நம்மீது பயந்தே உள்ளது. நடுவில் இந்த கொசு தொல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...