Thursday, July 21, 2016

::::::::::தெரிந்து கொள்வோம்:::::::::

* இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளைத் தாக்க லட்சக்கணக்கான வவ்வால்களைப் பயன்படுத்திய நாடு அமெரிக்கா.
* ஆசியாவின் வைரம் என்ற அழைக்கப்படும் நாடு இலங்கை.
* மனிதனைப்போல் நடக்கும் ஒரே பறவை பென்குயின்.
* அட்லாண்டிக் கடலை முதன் முதலில் விமானம் மூலம் கடந்து சாதனை புரிந்தவர் கேப்டன் லின்ட்பெர்க் (1927).
* நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு நாய்.
* நாணயங்கள் தயாரிக்கும் இடத்தின் பெயர் `மின்ட்' எனப்படுகிறது.
* எலும்புக் கூடில்லாத விலங்கு `ஜெல்லி'
* யானை படையுடன் ஆல்ப்ஸ் மலையை கடந்தவர் `ஹன்னிபால்'
* நீண்ட தேசிய கீதம் கொண்ட நாடு 'கிரேக்கம்'
* உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம் 'நீலத்திமிங்கலம்'
* `துருப்பிடித்த கோள்' என அழைக்கப்படுவது `செவ்வாய்'.
* கார்கள் அதிகம் உள்ள நகரம் - நியூயார்க்.
* டாக்சி (வாடகைக் கார்கள்) அதிகம் உள்ள நகரம் - மெக்சிகோ.
• கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினிக் குணம் உண்டு
* வெள்ளை பெயிண்டில் சில துளிகள் கறுப்பு பெயிண்ட் கலந்தால் மங்கலாவிடும் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு, மேலும் வெண்மை அதிகரிக்கும்.
* ஆஸ்திரேலியாவை ஏழு பறவையின் தாயகம் என்று அழைக்கிறார்கள்.
* தண்ணீரைவிட மனித ரத்தம் ஆறு மடங்கு அடர்த்தியானது. *துர்க்மேனிஸ்தான் நாட்டிலுள்ள `காராகும்' கால்வாய், உலகிலேயே மிக நீளமான பாசன கால்வாய் ஆகும். இதன் நீளம் 1,300 கிலோமீட்டர்.
*விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட் களில் `குளோரெல்லா பைரெனோஸ்டோஸாவும் இடம் பெறும். இது கரியமில வாயு மற்றும் உடலின் மற்றக் கழிவுகளை நீக்கவும் மற்றும் மனிதனின் சிறுநீரைச் சிதைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
* இந்தியாவின் உயரிய இலக்கிய விருது ஞானபீடம்
* ஒரு லிட்டர் கடல் நீரில் 30 கிராம் உப்பு உள்ளது.
* உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம்.
* இந்தியாவில் மிக உயரமான கோபுரம் டில்லியிலுள்ள குதுப்மினார்.
* மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு மொனாகோ.
* தார் பாலைவனம் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
* உலகின் மிக குளிரான பிரதேசம் சைபீரியா.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...