Monday, July 18, 2016

வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரியங்கள்!

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க சில எளிய வழிமுறைகள்

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க சில எளிய வழிமுறைகள்
தரித்திரத்தை தவிர்த்து செல்வம் நிலைக்கச் செய்யும் உன்ன‍தமான எளிய வழிமுறைகளை நீங்கள் நடக்க‍வும் கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து.
ஒருவருக்கு பணம் கொடுக்க
வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து கொடுக்க /வாங்க வேண்டும். செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடு க்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ் வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக்கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
1) வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
2) இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
3) வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
4) சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5) எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
6) வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
8) துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
9) உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சிறு வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் தரித்திரத்தை தவிர்க்க, உங்கள் செல்வம் நிலைக்க, பணம் பெருக, விருத்தியாக வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...