Tuesday, July 26, 2016

சுவாதி கொலை: விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே?

சுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே?

சுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே?
சுவாதி கொலை வழக்கில் தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்காக கைதுசெய்யப்பட்டுள்ள
ராம்குமாருடன் மேன்சனில் தங்கிருந்த மீனாட்சி புரத்தை சேர்ந்த 8 பேரிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சுவாதி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை 6 மணிக்கு மென்பொறியாளர் சுவாதி படுகொலை செ ய்யப்பட்டார். இக்கொலை நடந்த அடுத்த சில மணி நேரங்களில் இருந்து தமிழகமே அந்த கொலையை ப்பற்றி பேசியது. உலகம் முழுவதும் உள்ள ஊடகங் களில் தலைப்பு செய்தியானது. ஒருவார காலம் இந்த கொலைதான் பேசப்படும் செய்தியானது.
சுவாதிகொலை வழக்கில், ஒருவார தேடுதல் வேட்டை க்குப்பின்னர் தென்காசி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிறந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவாதியின் கொலையில் மர்ம ங்கள், கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ராம்குமார் கைது
ராம்குமாரை சொந்த ஊரில் போலீசார் கைது செய்த பிறகு, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித் தார் போலீஸ் கமிஷனர் T.K.ராஜேந்திரன். ‘இவ்வழ க்கில் ஒரே குற்றவாளி ராம்குமார் தான். அவனைப் பிடித்து விட்டோம்” என்றவர், சுவாதிமீது ராம்குமார் ஒரு தலை காதல் கொண் டிருந்ததாகவும், சுவாதி ஏற்காததால் கொலை நடந்திருக்கும் என்றும் கூறினார்.

ஒரு தலைக்காதலா?
ராம்குமார் ஒருதலையாக காதலித்ததற்கான ஆதாரங் கள் இருக்கிறதா என மீடியாக்கள் கேட்க, கமிஷனரோ ,விசாரணைக்கட்டத்தில் எதையும்வெளியிட முடியா து என்று கூறினார் கமிஷனர் ராஜேந்திரன்.

ராம்குமார் அப்பாவி
சுவாதியுடன்பழகமுடியாத விரக்தியில்தான் அவரை ராம்குமார் கொலைசெய்ததாக போலீஸ் தரப்பில் கூற ப்பட்டது. ஆனால், சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. ராம்குமார் ஒரு அப்பாவி என்று கூறி ராம் குமார் தரப்பி ல் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது.
வழக்கறிஞர் விலகல்
ராம்குமாரின் கழுத்தில் உள்ள காயம் ஆறாத தால், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ள அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ராம்குமாரு க்கு ஆதரவாக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, தனக்கு பல்வேறு அழுத்தங்கள் வருவதாக கூறி வழ க்கில் இருந்து விலகினார். இதையடுத்து ராம்ராஜ் என்னும் வழக்கறிஞர் ராம்குமாருக்காக ஆஜராகவுள்ளார்.
கண்ணால் கண்ட சாட்சி
சுவாதியை கொலைசெய்தது ராம்குமார்தான் என்பதை கண்ணால் கண்ட சாட்சி என யாரை யும் காவல்துறை அடையாளம் காணவில்லை. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள நபரை போ லவே, சூளைமேடு A.S. மேன்ஷனில் ஒருவர் தங்கியிருந்ததாக அதன் காவலாளி கோபால் கூறினார். அதன் அடிப்ப டையில் ராம்குமாரை காவல்துறை கைது செய்தது.
வாக்குமூலம் என்ன?
சுவாதியை கொலை செய்ததாக காவல் துறை யிடம் ராம்குமார் ஒப்புதல்வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில் , அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும்முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, A.S.மேன்ஷ னில் தங்கி இருப்பவர்களிடம் காவல்துறையினர் தொ டர்ந்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
ஆதாரங்கள் என்ன?
சுவாதியை கொலைசெய்ததாக காவல்துறையிடம் ராம் குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் முயற்சி யில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இ தற்காக, A.S. மேன்ஷனில் தங்கி இருப்பவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாதியை கொலைசெய்ததாக காவல்துறையிடம் ராம்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில், அவரு க்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருப்பவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
விசாரணை வளையத்தில் 8 பேர்
ராம்குமார் கைதுசெய்யப்பட்ட நாள்முதல் A.S.மேன்ஷ னை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ராம்குமாரின் ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள் என 8 பேர் எங்கள் மேன் ஷனில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பார்த்த சாட்சி யார்?
சுவாதி கொலையான அன்றுகாலை 6.15மணிக்கு ராம்கு மார் மேன்ஷனில் இருந்து வெளியே சென்றதை பார்த்ததா க யாராவது கூறுங்கள் என போலீசார் வலியுறுத்தி வருவ தாக கூறப்படுகிறது. சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் , ராம்குமாருடன் தங்கியிருந்த நடேசன் என்னும் நபர் வேலைக்கு சென்று விட்டு காலை 7 மணி அளவில்தான் அறைக்கு வந்துள்ளார்.
காவலில் எடுத்து விசாரணை
ராம்குமாரை புழல்சிறையில் சந்தித்த வழக்கறி ஞர் ராமராஜ், பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத் தியுள்ளது. சிறையில் இருக்கும் ராம்குமாரை போலீ ஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதற்குள் வழக்கை விரைந்து முடிக்கும் முயற்சியிலும் போலீசா ர் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணை

சுவாதி கொலை வழக்கு விசாரணை சரியா ன பாதையில் சென்றுகொண்டு இருப்பதாக தனிப் படை போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக A.S. மேன்சன் காவலாளி கோபாலி டம் நேற்று விசாரித்தோம். அவரிடம் ராம்குமா ர் குறித்த கேள்விகளை கேட்டோம். அவருக்கு சரியாக காதுகேட்காததா ல் நாங்கள் கேட்கும் கேள்விகளு க்கு வேறு பதிலை சொல்கிறார்.

காவலாளி தகவல்
கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் இந்த மேன்சனில் காவ லாளியாக கோபால் சேர்ந்துள்ளார். பணி நேரத்தில் அவர் அஜாக்கிரதையாகவே இருந்துள்ள தகவல் எங் களுக்கு தெரியவந்துள்ளது. சில கேள்விகளுக்கு அவ ரால் பதிலளிக்க முடியவில்லை. தேவைப்பட்டால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்துள்ள னர்.
அடித்துச்சொல்லும் போலீஸ்
இந்த வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என் பதற்கு போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ள ன. ஆனால், ராம்குமாருக்கு ஆதரவான வழக்க றிஞர்கள் வழக்கை திசைதிருப்ப சில தகவல்க ளை சொல்லி வருகிறார்கள். ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும்.
ஆதாரங்கள்
ராம்குமாருக்கும், சுவாதிக்கும் உள்ள பழக்கம் உள் ளிட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல் களையும், ஆதாரங்களையும் எங்களிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்று கூறியுள்ளனர்.
ராம்குமார் கழுத்தறுப்பு
சுவாதி பற்றி உணர்ச்சி வேகத்தில் ராம்குமார் எது வும் வாய் திறந்து விடக் கூடாது.. என்ற அக்கறை யினாலேயே ராம்குமாரை பேசவிடாமல் செய்யும் யுக்தியாக இக்கழுத்தறுப்பு வேலை நடந்திருக்கிற து என்ற சந்தேகம் ஊரில் பலருக்கும் உள்ளது. போலீசார் தன் மகனின் கழுத்தை போட்டோ எடுத்ததாக ராம்குமா ரின் தந்தையும் குற்றம் சாட்டியுள்ளார்.
விலகாத மர்மங்கள்
இந்த வழக்கில் இன்னும் விலகாத பல மர்ம ங்கள் உள்ளன. சுவாதியின் செல்போனை ராம்குமார் வைத்திருந்ததாககூறி கண்டுபிடித்துள்ளனர். அந்த செல்போ னில் இருந்த விபரங்களைப் பற்றியோ, சுவாதியில் லேப் டாப்பில் இருந்தவிபரங்களைப் பற்றியோ இதுவரை எந்த தகவலும் போலீசார் வெளியிட வில்லை.
முத்துக்குமார் யார்?
ராம்குமாரின் குடும்பத்தினரோ, முத்துக்குமாரை தேடி வந்து ராம்குமாரை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். இதுவே இந்த கொலை வழக்கில் பலவித சந்தேகங்க ளை எழுப்பியுள்ளது. சுவாதி கொலையைவிட கொலையா ளி என்று ராம்குமாரை போலீஸ் கைதுசெய்து பின்னரே பல விதமர்மங்கள் நிறைந்த வழக்காக மாறியுள்ளது. எனவே தான் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தர விடவேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...