Sunday, July 31, 2016

"அம்மா".......



தாமு வேலையில்லா பட்டதாரி. அவனது அண்ணன்கள் இருவரும் நல்ல வேளையில் இருந்தார்கள்.
ரேஷன், கரன்ட்பில், பால் வாங்க... என வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தாமு தான் செய்வான்.
அன்று கரன்ட் பில் கட்டிவிட்டு வீடு திரும்பும் போது மழை பெய்ய ஆரம்பித்தது. நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
தாமுவை பார்த்த முதல் அண்ணன் திட்டினான் "டேய் முட்டாள் மழை நின்ன பின்னாடி வர வேண்டியது தான" என்று.
இரண்டாவது அண்ணன் "எருமைமாடு போகும் போது குடை எடுத்துட்டு போனா என்ன" என்று.
அப்பா "தண்டச்சோறு பில்ல நனைச்சுட்ட, ஒரு வேலையை சொன்னா கரெக்டா செய்யுறியா"? என்று திட்டினார்.
தாமு ஒண்ணும் பேசாமல் தன் ரூமுக்கு சென்றான். அங்கு அவன் அம்மா கையில் டவலோடு நின்று கொண்டு இருந்தாள்.
"இந்த மழை என் பிள்ளை வெளிய போகும் போதுதான் பெய்யணுமா, கொஞ்ச நேரம் கழிச்சு பெஞ்சா என்ன" என்று சொல்லி கொண்டே தாமுக்கு சாப்பாடு ஊட்டினாள்.
உலகமே நம்மை திட்டினாலும் நமக்காக உலகத்தை எதிர்க்கும்
ஒரு காவல் தெய்வம்.
நமக்கு எந்த கெடுதலும் நினைக்காத ஓர் உயிர் "அம்மா".......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...