Friday, September 2, 2016

அட்டென்ட் டைம்ல ஆல் கடவுளும் எஸ்கேப்.



ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள்.
அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம்.
அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம கோபம். தற்கொலை செய்யமால் அப்படியே அமர்ந்து விட்டாள்.
ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முனு முனத்தது. இரண்டு நாளாக அவள் அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன் பிரம்மா விஷ்னு மூவருக்கும் ஒரே குழப்பம்.
அவள் யாரை நினைத்து தவம் செய்கிறாள் என குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம் வருகிறார்கள்.
அவள் உதடு அசைவதை வைத்து தன்னைதான் நினைத்து தவம் செய்கிறாள் என மூன்று கடவுளும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.
இவர்களின் தீராத சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன் தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.
நான்போய் அவளை எட்டி உதைக்கிறேன் யார் பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள் சென்று அவளை காப்பாற்றி, அவள்கேட்கும் வரங்களை கொடுங்கள் என்றார்.
இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற அதை ஆமோதிக்கிறார்கள்.
நாரதரும் அவள் அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார்.
அவள் மலையிலிருந்து கீழே விழும் போது சொன்னாள் "எந்த லூசு பயடா என்னை எட்டி உதைச்சது".. அட்டென்ட் டைம்ல ஆல் கடவுளும் எஸ்கேப்.
இதனால நாம சொல்லுறது என்னன்னா பொண்களோட மனசுல உள்ளத ஆன்டவனாலும் கூட தெரிஞ்சிக்க முடியாது . சிரிக்க மட்டும், யாரும் சண்டைக்கு வராதீங்கப்பா..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...