Monday, October 22, 2018

இப்படியே போனால் முடிவில் கலவரம்தான் வெடிக்கும்.

சபரிமலையில் எப்படியாவது ஒரு பெண்ணையாவது மலை ஏற்றிக் காட்டவேண்டும் என்பதில் ஆட்சியும், அதிகாரமும், வீம்பும், வக்கிரமும், அறியாமையும், கடவுள்மறுப்பும், இந்து விரோதமுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி, பந்தளந்திட்டா பகுதியின் காவலை மாற்றுமத அதிகாரியிடம் ஒப்படைத்து, சபரிமலை ஏரியாவை ஒரு பெண் அதிகாரியிடம் கொடுத்து, மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்களை மாலை விபூதி குங்குமத்தால் வேஷம் போட வைத்து, காவல்துறையிலும் தனது கீழ்தரமான புத்தியை கலந்ததோடல்லாமல் எப்படியாவது இன்று நடைசாத்தும் முன்பே ஒரு பெண்ணையாவது சன்னிதானதிற்கு கொண்டு போயே ஆகவேண்டும் என்ற வெறித்தனமான எண்ணத்திற்கு காவல்துறையில் உள்ள கருப்பாடுகளை பயன்படுத்திக் கொண்டது மிகவும் கீழ்தரமான அநாகரீகமான செயல். கோழைத்தனமான செயல்.
மாற்றுமத பெண்களைக் கூட மாறுவேஷம் போட்டு போலீஸ் காவலனுடன் மலையேறி காட்டுக்குள் அழைத்துச் சென்றாவது தங்களின் எண்ணத்தை நிறைவேற்ற நினைக்கும் கேரள முதல்வர், அலை அலையாக கேரளா முழுவதும் போராடும் பெண்கள் கூட்டத்தைக் கண்டும் திருந்தாத கம்யுனிஸ்ட் முதல்வர், யாரிடமோ விலைபோயிருந்த போதிலும், மாற்றுமதத்தின் கடவுளர்களை விட ஐயப்பன் சக்திவாய்ந்தவர் என்பதை மாற்றுமதத்தினருக்கும் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். அதனால் தான் அவர்களுக்கு வேஷமிட்டு பாதுகாப்பு கொடுத்து அழைத்துச் செல்ல முயன்று இருக்கிறார்
கேரளாவிலுள்ள கம்யுனிஸ்ட் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இந்துக்களுக்கும், கோவில்களுக்கும் மட்டும் விரோதமாக கருத்துக்களை பரப்புவோர்களும் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இந்துமதம் புகுத்தப்பட்டு வளர்ந்ததில்லை, யாரு வந்தாலும் போனாலும் , வாழ்த்தினாலும் தூற்றினாலும் இந்துமதத்தை உங்களால் இம்மி அழவு கூட அழிக்க முடியாது. கஷ்டப்படுபவர்களையும், ஏழைகளையும், அப்பாவிகளையும் ஆசைவார்த்தை சொல்லியும், போவோர் வருவோர்களிடம் நோட்டீஸ் கொடுத்தோ, மற்ற மதத்தையும் கோட்பாடுகளையும் கீழ்தரமாக பேசியோ வளர்க்கப்பட்டது இல்லை இந்து மதம்.
இந்துமதம் உணர்வால் ஏற்பட்டது. மாற்றுமதத்திற்கு மாறியவன் கூட அவன் சென்றடைந்த மதத்தில், இந்துமத வழிபாட்டு முறையைத் தான் கடைபிடிக்கிறான்.அவனால் கடவுள் உருவத்தை தான் மாற்ற முடிந்ததே தவிர இந்துமத பழக்கவழக்கங்களை மாற்றமுடியவில்லை. நாங்கள் தூணிலிருந்து துரும்பு வரை எல்லாவற்றிலும் கடவுளைக் காண்போம். சாணத்திலும், மஞ்சள் பொடியிலும், மண் உருண்டையிலும் கூட கடவுளைக் காண்போம். உதிக்கும் சூரியனையும், மனதை மயக்கும் சந்திரனையும், உடலை வருடும் காற்றையும், பூமியைக் குளிர்விக்கும் நீரையும், அணைத்தையும் பொசுக்கி எடுக்கும் நெருப்பையும் என பரந்துவிரிந்திருக்கும் உலகில் உள்ள வெற்றிடத்தையும் கூட கடவுளாக பார்ப்பது தான் இந்துமதம். அது தான் இந்து மதத்தின் சிறப்பு.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்த்ரேலியா, பாக்கிஸ்தான், மட்டுமல்லாமல் உலகில் உள்ள அணைத்து நாடுகளிலும் உள்ள வெளிநாட்டினர் கூட இந்து மதத்தின் பெருமையை உணர்ந்து அவர்கள் இந்துவாக மாறி, சிவனுக்கும், பெருமாளுக்கும் கோவில்கட்டி, இந்தியாவைப் போல், இல்லையில்லை, அதற்கும் மேல், பூஜையும், வழிபாட்டுமுறைகளும், உற்சவமும், அன்னதானமும் செய்து மிக மிக சிறப்பாக செய்வதன் மூலம், எங்கெங்கெல்லாமே இந்துமதம் வளர்ந்து கொண்டேயிருப்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டாக ஆகிவிடும் என்று நினைப்பது போல் பினராயியும், அவரது ஆதரவாளர்களும் சபரிமலையை அசிங்கப்படுத்திவிட்டால் இந்துமதமே அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும் போது உங்களுக்கே புரிந்திருக்கும் என்பதை, உங்கள் வயிற்றில் பற்றி எரியும் நெருப்பும், வாயிலிருந்து வரும் புகையும் காண்பித்துக் கொடுத்துவிடுகிறது. திருந்துங்கள். காலம் உங்களையும் மன்னித்து வரவேற்க்கும்.

இவர்கள் திருந்த மாட்டார்கள் சார்.பிணராய் ஒரு அணையபோகும் விளக்கு. அதான் பிரகாசமாக எரிகிறான். இப்பொழுது கம்யூனிஸ்ட் கேரளாவில் அழிந்தால் இனி எப்போதுமே எழப்போவதில்லை. அதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...