Thursday, October 18, 2018

'ஆல் இன் ஆல்' வினிகர்..!


வினிகரை இதற்கெல்லாமா பயன்படுத்துராங்க? வியக்க வைக்கும் வினிகரின் பயன்கள் எத்தனை என்று தெரியுமா?
வினிகர் சமையலில் , ஊறுகா சேர்ப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால், வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா? பார்போம் வாருங்கள்.
-ஒரு டப் மிதமான சூட்டில் வெந்நீர் ஊற்றி, ஒரு மூடி வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் லிஸ்டெரின் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதில் கால் பாதங்களை விட்டு, 10நிமிடம் ஊரவிடுங்கள். பின் பாருங்கள் பாதங்களின் மிருதுவான தோற்றத்தை. பூஞ்சை தொற்றை நீக்கும்.
-தலைக் குளித்தவுடன் கூந்தலுக்கு கடைசி அலசலுக்கு வினிகர் கலந்த நீரை உபயோகித்தால் கூந்தல் மென்மையாக , பட்டுப்போல் இருக்கும்.
-அலங்கார ஜாடியில் பூக்கள் சீக்கிரம் வாடாமல் இருக்க ஒரு ஸ்பூன் வினிகரை ஜாடியில் உள்ள தண்ணீரில் ஊற்றி வைக்கலாம்.
-பித்தளை, செம்பு போன்ற உலோக பொருள்களை சுத்தம் செய்வதற்கு முன், நீரில் வினிகர் கலந்து அதில் ஊரவிட்டால் சுலபமாக சுத்தம் செய்து விடலாம். மேலும், இரும்பில் துருவைக்கூடக் கரைக்கும் சக்தி வினிகருக்கு உண்டு.
-முழு முட்டை நீரில் வேக வைக்கும்போது, உடையாமல் இருக்க நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை ஓடு உடைந்தாலும் உள்ளிருப்பது வெளியில் வராது.
-சிக்கனில் வினிகர் தெளித்து பிரட்டி வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். அல்லது பிரியாணிக்கு சிக்கன் வேக வைக்க வினிகர் சேர்த்துக்கொண்டால், மிருதுவாக வெந்துவிடும். மாமிச வாடையும் அடிக்காது.
-சமையலில் காரத்தை கட்டுபடுத்த வினிகரை ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
-சமயல் பாத்திரம் அடி கருகிவிட்டால் வினிகர் ஊற்றி ஊரவிட்டு கழுவுங்கள். பாத்திரம் புதிது போன்று ஆகும்.
-ஆடைகளில் கறைப் பட்டால், வினிகர் ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து துவைத்தால் கரை நீங்கும்.
-புதிய பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை வினிகர் ஊற்றி இரண்டு நிமிடம் ஊரவிட்டால், ஸ்டிக்கர் பசையில்லாமல் பாத்திரத்தை விட்டு பிரிந்து வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...