Thursday, October 25, 2018

தீபாவளி பட்டாசு தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பை வழங்கும்போது மாண்பு மிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு மிக முக்கியமான விஷயத்தைக் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டனர்.
காற்று மாசு காற்றில் பரவும் விதம்தான் அது. ஒரு இடத்தில் ஒரு வெடி வெடித்தால், அந்த நேரத்தில் அங்கே காற்று மாசு, மற்றும் ஒலி மாசு உண்டாவது நிஜம்தான். ஆனால் சில நொடிகளிலேயே அந்த காற்று மாசு பரவி அதன் அடர்தி குறைது விடுவதைக் காணலாம். இதேதான் 1000வாலாக்களுக்கும் 5000வாலா வெடிகளுக்கும் கூடப் பொருந்தும். இவை சில நிமிடங்களில் காற்றில் கரைந்து விடும். மாசும் குறைந்து விடும். இப்போது விஷயத்துக்கு வருவோம்.
சாதாரணமாக தீபாவளிக்கு முந்தைய நாள் காலையிலேயே தொடங்கும் வெடிச் சத்தம், மறுநாள் வரை நீடிக்கும். அதாவது சுமார், 60 மணி நேரம் என் அவைத்துக் கொள்வோம். இரவைக் கழித்தால் கூட 50 மணி நேரம் என வைத்துக் கொள்ளலாம். இத 2 மணி நேரமாக குறைப்பதன் மூலம், காற்று மாசு மற்றும் ஒலி மாசை 25 மடங்கு கோர்ட் அதிகரித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான விளைவுகளை சாதாரண மனிதனுக்கே ஏற்படுத்தும். வியாதியஸ்தர்கள் மற்றும் பறவைகள் மற்றும் விலங்குகள் கட்டாயம் மிக அதிகமாக பாதிக்கப் படுவார்கள். அன்றைய இரவு மருத்துவமனைகளில் சாவுகள் பத்து மடங்கு அதிகரிக்கும். பல நூறு பேர் செவிடாகலாம். சிறிய பறவைகள் மற்றும் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் மரணித்தாலும் ஆச்சரியம் இல்லை.
ஆக மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக கொத்துக் கொத்தாக்க் கொலை செய்வதற்கு சமமான உத்தரவுதான் இது. உடனடியாக இந்தக் காரணங்களை யாராவது உச்ச நீதி மன்றத்தில் ஒரு சீராய்வு மனு மூலம் விளக்கினால் நாட்டு மக்களைக் காப்பாற்றியவர் ஆவர்.
என்னால் முடிந்தது இவ்வளவுதான். யாராவது இதை நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வரை ஷேர் செய்யுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...