Monday, October 22, 2018

இந்து மதம் ஒரு சமுத்திரம் நான் அதில் ஒரு ஸ்பூன் மட்டுமே குடித்துள்ளேன்.....

சகோதரர் அலி அக்பர்
ஜனம் டிவி இன்றைய விவாதத்தில் பங்கேற்ற மல்லிகா என்ற இந்து பெண்மணி, கிருஸ்துவ மதத்திற்கென பைபிள் போல. முஸ்லீம் மதத்திற்கென குர்ஆன் போல, இந்து மதத்திற்கென ஒரு புத்தகம் உண்டா ? எனவும், ஏன் பெண்கள் போக கூடாது எனவும் உளற அதற்கு பதிலடியாக அதில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் அலி அக்பர் கொடுக்கும் பதில்களின் தமிழாக்கம்...........
மற்ற மதங்களுக்கு ஒரு புத்தகம் தான் உள்ளது, ஆனால் இந்துக்களுக்கு ஒரு லைப்ரரியே உள்ளது அதையெல்லாம் உங்களை படிக்க விடாமல் செய்து இந்து மதத்தின் அருமையை உணரவிடாமல் செய்து இந்துக்களை ஓரணியில் திரளவிடாமல் திராணியற்றவர்களாக்கி விட்டனர்..
அதனால் தான் அறிவில்லாமல் இப்படி முட்டாள் தனமாக பேச வைக்கிறார்கள்..
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய ஒரு சிறுகதையை விளக்கி ஹிந்து மதத்தை விளக்க ஒரு புத்தகம் இல்லை ஒரு நூலகமே உள்ளது!!
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதிய பல ஆயிரம் புத்தகங்கள் ஹிந்துக்களின் கலாச்சாரங்களை விளக்க இருக்கும் போது... அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் படிக்காமல்...‌
இயேசுகிறிஸ்துவிற்கு பைபிள் இருக்கிறது முகமது நபிக்கு குர்ஆன் இருக்கிறது என்றும் காலம் காலமாக ஹிந்துக்களுக்கு என்று ஒரு புத்தகம் இல்லை அவர்கள் கல்லை வணங்குகிறார்கள் மண்ணை வழங்குகிறார்கள் என்று பொய்யுரைத்து இந்துக்கள் மனதை புண்படுத்தி வருகிறார்கள் எனவும்....
இந்துக்கள் இந்த மண்ணை நேசிப்பவர்கள் தற்போது ஹிந்துக்களின் தலைகுனிவுக்கு உனனை போன்ற சிந்தனைகள் கொண்ட நபர்களே காரணம்....
இந்தக் கருத்தைச் சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை...
நான் ஹிந்து கலாச்சாரங்கள் பற்றிய ஆயிரம் புத்தகங்களை படித்த பேராசிரியர் எனவும்...
இந்து மதம் ஒரு சமுத்திரம்
நான் அதில் ஒரு ஸ்பூன் மட்டுமே குடித்துள்ளேன்.....
சிவனுக்கு என்ன படைக்க வேண்டும், திருமாலுக்கு என்ன படைக்க வேண்டும், அம்மன் கோவில்களில் என்ன நடைமுறை, ஐயப்பனின் வரலாறு என்ன இதையெல்லாம் படித்து விட்டு வா என்றதும் அப்பெண் அரண்டு விட்டார்.
அப்படி உனக்கு சந்தேகம் இருந்தால் எவ்வளவோ இந்துமதம் பற்றி விளக்க ஆசான்கள் உள்ளார்கள் அவரிடம் சென்று படித்து கொள் என்று நெத்தியடி பதில்கள் கொடுத்துள்ளார்...
இந்துக்களே தெரியாத பல வேத விசயங்களை அனாசயமாக தெரிவித்த அலி அக்பருக்கு நன்றி
வெட்கி தலை குனிய வேண்டும் போலி மதசார்பின்மைவாதிகள்
சகோதரர் அலி அக்பர் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...