Wednesday, October 17, 2018

தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள்


இந்தியாஇலங்கைமலேசியாசிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒருநிமிடம் இது பல்பொடி விளம்பரம் அல்லதமிழன்புறக்கணிக்கப்படுகிறஅடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான்இது.

கேரளாகர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும்நிலைஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம்மராட்டியம்,மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய்கல்கத்தாவிலும்,டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல்ஜெர்மனியில் கூடநியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால்பிடிக்கவில்லைதமிழனுக்கு என்ன ஆச்சுஎல்லோரும் திட்டமிட்டுஅவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்அவன் செய்த தவறுதான் என்ன?

முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல் எந்த இடத்தில் விட்டாலும்அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல்அந்ததன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார்பிழைப்பதையும் தடுப்பது இல்லைஆனால்அதே தமிழன் வேறுமண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல்மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது.அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்கவிடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

தமிழன் அறிவாளிஆனால்புத்திசாலி அல்லஇரண்டுக்கும்வித்தியாசம் உண்டுதன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத்தருபவன் அறிவாளி (உதாரணம்தாமஸ் ஆல்வா எடிசன்). தன்அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாகபயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்தமிழகஅரசியல் தலைக்ள்).


பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிறமற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணைமூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவதுஅதனால் ஒரு நிலையில்அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்தமூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள்முன்னேறினால் பொறுக்காதுஒரு நாய் அதிகம் குரைப்பதேதெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான்அது போல சகபெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம்சுருங்கச் செய்யும்.

இது உண்மைஅதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால்இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காதுதன் இனத்தவனைக்கெடுக்கவோபோட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்கமாட்டான்இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்றஇனத்தவர் பயன்படுத்திக் கொள்கின்றனர்பிழைக்கப் போன வேறுஇடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான்கடைசியில்எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது.

தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்அதே நேரம்தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோதெலுங்கரோகன்னடரோபிழைக்க வந்தால்தான் காலூன்றியவுடன்தன் மண்ணில் இருந்துபிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக்கொள்கிறார்கள்திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள்.இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும்மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு.அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டுகுறைந்ததுஅவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும்தமிழனுக்கு அதிகவாடகைநடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

பெண்ணாசை: பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம்என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது என்றாலும் கூட ,தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம்அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக்கால அரசர்கள் , பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்றுபெண்ணாலும் அழகிய பெண்களை முன் நிறுத்திய படைகள்மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால் அழிந்தவர்கள் என்றுவரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக நிறுவனங்களைஉருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப்பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதைமற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.

மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும்தங்கள் மொழிஇனஉணர்வைக் காக்கசாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளிவைப்பார்கள்உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின்குரல்தினசரி ‘அரிவராசனம்பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்கவைக்கும்அது மலையாளிகளின் ஒற்றுமைஆனால்தமிழனோமதசாதி உணர்வுகளுக்காகதமிழ் உணர்வையும்தமிழினஉணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும்தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான்ஆனால்தமிழர்களில்பெரும்பான்மையான இந்துக்கள்புத்தமதச் சிங்களன்தான் நமக்குநெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களைஎதிர்த்தனர்அங்கே மொழியை விட மதம் பெரிதாகப்போனது.வடக்கு மாகாணத் தமிழன்கிழக்கு மாகாணத் தமிழனைமட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லிதாழ்ந்த ஜாதி என்றுகாரணம் காட்டித் தள்ளி வைத்தான்புறக்கணித்தான்அங்கேமொழியை விட சாதி பெரிதாகப் போனதுதமிழகத்தில் இருந்துஇலங்கை போன மலையகத் தமிழர்களைசிங்கள அரசுஒடுக்கியபோதுஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை.அங்கும் இன உணர்வில்லை.

தன் அடிப்படை அடையாளங்களைவிரும்பி முற்றிலுமாகத்தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொருகுணம்ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவேஇருப்பான்ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசாரவேர்களைக் கைவிடுவது இல்லைஆனால்தமிழன் அதைப்பற்றிக்கவலைப்படுவதே இல்லைபொதுவாக உலக மக்களிடம் உள்ளஇன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பதுஇல்லைஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில்பேசுவார்கள்இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால்தெலுங்கில் பேசுவார்கள்இரண்டு கன்னடர்கள் சந்தித்துக்கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள்இரண்டு தமிழர்கள்சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள் நீங்கள் அறிந்தவிஷயம் இதுஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும்இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லைஅதனால் ஏற்படும்எரிச்சல் கோபமாக மாறுகிறது.

தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும்உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சிமொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதமிழ் மக்களுக்குநிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின்களமாக இருந்த பல நிலங்கள்தமிழின கலாசாரமாக சின்னமாகஇருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பலவளமான பகுதிகள்நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்றமாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன.

அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்ததி.மு..,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டுவாங்க முடியாது என்று எண்ணிதமிழ்ப் பெருமாநிலம்சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுதிராவிட நாடுஎன்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல்வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுஆந்திரகேரள,கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள்எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர்விரட்டப்பட்டனர்அடுத்தடுத்தகட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது.ஆனால்தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும்தொடர்ந்து அனுமதித்தது.

இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர்அதன்பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டேதங்கள்மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர்தமிழனை சுரண்டினர்.தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்மீட்டிங் பார்ப்பதில்குறியாக இருந்தான்.

இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்...காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபாபட்டீலை நிறுத்துகிறதுஅவர் மராட்டியப் பெண்மணி.மராட்டியத்தில் காங்கிரஸும்சிவசேனாவும் எதிர்க்கட்சிகள்.ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபாபட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாகஇருக்கலாம்ஆனால் எங்கள் மண்ணின் மகள்மராட்டியமாணிக்கம்எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு,கூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலைஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.

ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கியபிரதீபா பட்டீலைஅப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன்முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்திபிரதீபாபட்டீலுக்கு பலம் சேர்த்துஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக்காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

ஆந்திராவோகர்நாடகாவோகேரளாவோ அந்த மொழி இனம்சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காகஒரு போராட்டம் நடந்தால்,அரசாங்கம்அரசியல் தலைவர்ஆள்வோர் அதை அடக்கச்சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும்போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும்அவர்கள் எல்லாம்உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோநம் இனமொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும்இருக்கும்.

அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்ததமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்ததுஎன்பதையும் பார்த்தோம்.ஆனால் தமிழ்நாட்டில்நமதுமீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலைஇல்லைஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்களமீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டுசுடுநீரில்குளிப்பாட்டி,சொறிந்து விட்டுசொடக்கெடுத்துதலைவாழைஇழைபோட்டுஉணவு ஊட்டிபீடா மடித்துக்கொடுக்கும் தமிழகபோலீஸ்...

தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காகதமிழனுக்காக போராடினால்மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும்தமிழகக் காவல்துறைகாசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில்மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும்அது கட்சி அரசியலோடுநின்றுவிடும்கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள்ஓட்டுப்போட மாட்டார்கள்.

ஆனால்தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள்கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக்கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராதஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழகவாக்காளர்கள்...

தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும்இப்படிப் பலகாரணங்கள்.... பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை.அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன்அதனால் தன்னைத்தானே அழித்துக்கொள்பவன்மாறவேண்டும்இல்லையென்றால்இன்னும் நாற வேண்டி வரும்.



காவிரி நீர் பிரச்னை குறித்து  தினமலர் நாளிதழில் வந்த ஒருகட்டுரைக்கு எழுதிய கடிதம் இதுதமிழர்களாகிய நாம் அனைவரும் படித்துசிந்திக்கவேண்டிய கருத்துக்களாக இருப்பதால் இதை என்வலைத்தளத்தில் பதிவேற்றியிருக்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...