Monday, October 22, 2018

அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கும் பக்குவம் இல்லாத திமுக அழியும்....

இன்று சபரிமலை ஐயப்பன் விவகாரத்தைக் கேலி கிண்டல் செய்து பதிவிடும் திமுக திக கூட்டத்திற்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது
"திமுக என்ற கட்சியின் ஆயுள் முடிவுக்கு வரவுள்ளது. அதற்கு தாங்களே காரணம் என்று கூடிய விரைவில் உணர்வீர்".
அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கும் பக்குவம் இல்லாத திமுக அழியும்....
----------------------------------------------
அடுத்து ஒரு திமுக நிர்வாகி செய்தி ஒன்றை எனக்கு அனுப்பினார்:
"திமுக மாவட்ட செயலாளர் உதவி மூலம் திருப்புவனம் என்னும் ஊரில் 50கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை மீட்டார்" என்று செய்தி தினமலரில் வெளிவந்துள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மறைமுக ஆணையை திமுக தலைமை அனுப்பியுள்ளது அதன் படி கோவில் நிலங்கள் மீட்பு சார்ந்து எதாவது செய்தி வெளிவரும் வண்ணம் நடவடிக்கைகளில் இறங்குமாறு கூறியுள்ளது... அதை அறிவேன்... {இந்துக்களின் வோட்டை சிதறாமல் பார்த்துக்கொள்ள பயந்து பதுங்குகிறது திமுக என்பது புரிகிறது..}
ஆனால் அதே திருப்புவனத்தில் காசியானந்த சுவாமிகள் மடம் என்று ஒன்று உண்டு அந்த மடத்திற்கான சொத்துக்கள் 25 வருடங்கள் முன் எவ்வளவு ? இப்போது எவ்வளவு என்று இதே திமுக கூட்டத்தை வெளியிடச் சொல்லுங்கள் பார்க்கலாம்... வெளியிட மாட்டார்கள். அதே கோவிலுக்கு சொந்தமான நகைகள் விவகாரட்த்தை வெளியிடச் சொல்லுங்கள்??? அதே ஊரில் புத்த சிலைகள் மிகப் பழமையான சிலைகள் இருந்து அவை எல்லாம் எங்கே போனது என்று கேளுங்கள்????? பதில் எதுவும் வராது.. அவ்வளவு தான் திராவிட ஆட்சி... சரியா..
சாதாரண மக்கள் சொத்தையே மிரட்டு அடிமாட்டு விலைக்கு வாங்கி நில அபகரிப்பு செய்த திமுக என்ற திருட்டு கூட்டம் - கோவில் சொத்தை கேள்வி கேட்பார் இல்லாத சொத்துக்களை விட்டு வைத்திருக்கும் என்று நீ நம்பினால் அதை விட முட்டாள் தனம் வேறு உண்டோ??????
திமுக கவுண்ஸ்லர் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை இது கட்சி அல்ல ஒரு கூட்டு கொள்ளை அடிக்கும் கும்பல். அவ்வளவு தான். எனவே திமுக என்ன நாடகம் போட்டாலும் இந்த முறை விழிப்புணர்வு மக்களிடம் உண்டு.
{விழிப்புணர்வு இல்லை என்றால் ஏற்படுத்துவோம்... எனவே இந்த செய்தி எல்லாம் நம்பும் அளவுக்கு நான் வெகுளி அல்ல.}
-------------------------------------------------
வைக்கம் வீரர் பெரியார் என்று வாய்கூசாமல் வரலாற்றை எல்லாம் மாற்றித் திரித்து பொய் பேசி அனைத்தையும் பெரியார் சொல்லிவிட்டார் செய்தார் என்று கதை அளந்து ஊரை ஏமாற்றி - இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் எதிராக நிற்பது தான் பகுத்தறிவு என்று திரியும் பெரியாரியவியாதிகள் அனைவருக்கும் நான் சொல்லி கொள்ள விரும்புவது :
ஒன்று திமுக அழியும்... இல்லை
திமுக தலைவர்கள் இன்னும் கொஞ்சம் காலத்தில் தீபாவளி வாழ்த்து மட்டும் அல்ல சீக்கிரம் முருகனுக்குக் காவடியும் , ஐய்யபனுக்கு மாலையும் போட்டு "சுவாமியே சரணம் ஐயப்பா" என்று சொல்லும் காலம் வரும். இப்படியான ஒரு காலகட்டத்தை விரைவில் உருவாக்குவோம். காத்திருங்கள்....

ஸ்டாலின் அவர்களுக்கு ஒன்றை உறுதியாகக் கூறுகிறேன் எத்தனைக் கட்சி கூட்டணி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த முறை சுவாமி தர்மசாஸ்தா மணிகண்டம் பக்தர்கள் மட்டுமே தேர்தல் விதியை முடிவு செய்வர்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...