Tuesday, October 22, 2019

*தில்லாலங்கடி திமுக#1*

விக்கிரவாண்டில வன்னியரை நிறுத்து, நாங்குனேரில நாடார நிறுத்து, யாராவது கேட்டா சமூக நீதினு கத்து.
*தில்லாலங்கடி திமுக#2*
பஞ்சமி நிலம்னு சொன்னா பாதில வாங்குன பட்டாவை காட்டு, தாய் பத்திரம் எங்கடானு கேட்டா கண்டமேனிக்கு திட்டு!
*தில்லாலங்கடி திமுக#3*
மிசா கைதிகள் பட்டியல் பற்றிய ஷா கமிஷன் ரிப்போர்ட்ல ஸ்டாலின் பேரு எங்கனு கேட்டா, அவங்க அப்பா எழுதுன நெஞ்சுக்கு நீதியோட கடைசி பக்கத்த புரட்டுனு சொல்லனும்.
*தில்லாலங்கடி திமுக#4*
கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலினானு கேட்டா இது சங்கர மடமானு எகிறு, ஸ்டாலினுக்கு பிறகு ஏன் உதயநிதினு கேட்டா இது உட்கட்சி விவகாரம்னு பம்மு!
*தில்லாலங்கடி திமுக#5*
பொதுத்தொகுதிக்கு நீங்க ஆசைப்படலாமானு விடுதலைச்சிறுத்தைகளை அவமானப்படுத்தனும், தலித்துகளின் சம்பந்தி நான் என மேடைகளில் பிரகடனப்படுத்தனும்.
*தில்லாலங்கடி திமுக#6*
மக்கள் நலக்கூட்டணி அதிமுகவிடம் 500 கோடி வாங்கிவிட்டதுனு சொல்லனும், கூட்டணி வைத்துக்கொண்ட பின் கட்சி வீதம் கோடி கோடியா அக்கவுன்ட்ல போடனும்.
*தில்லாலங்கடி திமுக#7*
டாக்டர் ராமதாஸ் கூட கூட்டணி வெச்சா விடுதலைச்சிறுத்தைகளை வெளில அனுப்பிடனும், சிறுத்தைகளை உள்ள வெச்சிகிட்டா பாமகவை பார்சல் பண்ணிடனும்.
*தில்லாலங்கடி திமுக#8*
தேர்தல் பிரச்சார கூட்டம்னு மக்கள் கூட்டம் கூட்ட குத்தாட்டம் போடனும், பெண்களை பெரியார் சொன்ன மாதிரி மதிக்கிறோம்னு நாலு paid திராவிட சிசுக்களை வெச்சு மீடியா முழுக்க பேட்டி கொடுக்க வைக்கனும்.
*தில்லாலங்கடி திமுக#9*
ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்குனு சொல்லனும். அதுவரைக்கும் சொந்தக்காரன் பேர்ல எல்லாம் மது ஆலைகளை நடத்தி ஊரில் பாதி பேரை கொல்லனும்.
*தில்லாலங்கடி திமுக#10*
*இந்துக்கள் பண்டிகைனா விடுமுறை நாள் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள், மத்த மத பண்டிகைனா பேர் சொல்லி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்.*
இத்துடன் இன்றைய தில்லாலங்கடி திமுக செய்திகள் நிறைவடைகிறது. உதயநிதி ஸ்டாலின் சூறாவளி சுற்று பயணம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்ற விளையாட்டு செய்திகளுடன் இன்று விடைபெறுகிறேன். *நாம் மீண்டும் நாளை சந்திக்கும் வரை, ஆட்டுக்கு தாடி, மாட்டுக்கு கவர்னர் என்ற ஸ்டாலின் அவர்களின் பொன்மொழியை உடன்பிறப்புக்கள் நூறு முறை எழுதி பழகுங்கள்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...