Thursday, October 31, 2019

சரியா சொன்னீங்க போங்க!

ஸ்டாலினுக்கே செல்வாக்கு அதிகம் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் நாளிதழின் அலுவலகம் மதுரையில் கொளுத்தப் பட்டு 3 பேர் உயிரிழந்தனர்.
அப்போது தனக்கு ஆதரவாக கணிப்பு வெளியிட்டு அதனால் தாக்குதலுக்கு ஆளாகிய அந்த நாளிதழின்...
இறந்து போன ஊழியர்களுக்கு இப்படி ஓடிப்போய் ஸ்டாலின் பணம் கொடுத்தாரா?
தனக்கு ஆதரவாக நின்ற நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டு அதன் 3 ஊழியர்கள் தீயில் சிக்கி மாண்டபோது...
ஸ்டாலினுக்கு வரவே வராத பதற்றமும், ஓடிச் சென்று உதவி புரியும் குணமும்...
இப்போது சுஜித் 'வில்சன்' விஷயத்தில் - அதிலும் பெற்றோரின் கடைந்தெடுத்த அஜாக்ரதையாலும், முட்டாள்தனத்தாலும் - உயிரிழந்த அந்தக் குழந்தை விஷயத்தில் - திடீர் கரிசனம் பொங்கி வருவது ஏன்?
தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு, அதில் 3 பேர் செத்தபோது தமிழகத்தில் திமுக ஆட்சிதானே நடந்தது?
அந்த இறந்து போன 'தினகரன்' ஊழியர்கள் 3 பேர் குடும்பத்தில்...
ஒவ்வொருவருக்கும் அரசு வேலை வழங்கி இருக்கலாமே ஸ்டாலின்?
முட்டாள் போராலீஸ், ஊடக நெறியாட்டிகள்... சிந்திப்பார்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...