Wednesday, October 23, 2019

தீர்க்க வேண்டியது பிரச்சினைகளை மட்டுமே. பிரச்சினைகளை உருவாக்கியவரை அல்ல.

எதிரிகளும் துரோகிகளும் நிறைந்த உலகத்தில் வாழப் பிடிக்காமல் ஒதுங்கிச் செல்ல தொடங்கினால் இந்த உலகில் உனக்கு இடமே இல்லை. எதிரிகளையும் துரோகிகளையும் சகித்து வாழப் பழகி விட்டால் வாழ்வின் அர்த்தம் புரியும்.
அது என்னமோ தெரியல வாழ்க்கையில நமக்கு எதையெல்லாம் பிடிக்குதோ அதை எல்லாம் வெறுத்து ஒதுக்குற அளவுக்கு எதிர்ப்பு வருது. நமக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை மாறும் என்று எண்ணிக் கொண்டிருந்த நமக்கு கடைசில நம் எண்ணங்களை தான் மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது.
விலகி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்த பிறகு, வெகு சுவாரசிய நாடகமாக இருக்கிறது வாழ்க்கை.
எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொல்ல வந்தவர் சொல்வது எல்லாவற்றையும் அல்ல.*
வாழ்வில் எல்லா துயரங்களும் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...