Tuesday, October 29, 2019

சட்டத்திற்கு எதிராக ஆழ்துளை கிணற்றை மூடாத குற்றவாளிக்கு அரசுப் பணத்திலிருந்து வாரி வழங்குவத எந்த விதத்தில் நியாயம்?

* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள தோப்புப்பட்டியில் 22.2.2009ல் எட்டப்பன் - அழகம்மாள் தம்பதிகளின் 6 வயது மகன் மாயி இருளப்பன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 30 மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டு உயிரிழந்தான் . .
* 27.8.2009ல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டியில் கோபிநாத் என்ற 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டது.
* 8.9.2011ல் நெல்லை மாவட்டம் கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுதர்சன் என்ற சிறுவன் உயிரிழந்தான்.
* 2.10.2012ல் கிருஷ்ணகிரி மாவட்டம் மந்தையூர் கிராமத்தில் 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குணா என்ற இரண்டரை வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
* 25.4.2013ல் கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட முத்துலெட்சுமி என்ற சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
* 28.9.2013ல் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த தேவி என்ற 4 வயது சிறுமி உயிரிழந்தாள்.
* 25.4.2014ல் விழுப்புரம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயது சிறுமி பலமணிநேர போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டு மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
* 14.4.2014ல் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 6 மணிநேர போராட்டத்துக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்டான்.
* 15.4.2014ல் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலெட்சுமி தம்பதிகளின் ஒண்ணரை வயது மகன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டான். ரோபோமூலம் மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
* 13.4.2015ல் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
* 2015ல் நாகப்பட்டினம் அருகே 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவித்த 2 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான் ....
மேற்காணும் இச்சோக சம்பவங்கள் அனைத்திலும் ( கடைசி 2 சம்பவங்கள் தவிற ) மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவித்த / உயிரிழந்த சம்பவங்கள் ....
அதாவது நேற்றைய சுஜித் வில்சன் இறந்த மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி சம்பவத்துக்கு முன் நிகழ்ந்த அவலங்கள் ...
சுஜித் இறப்பைப்போலவே மேற்காணும் அனைத்து சம்பவங்களுமே துரதிருஷ்டமானது தான் ...
எள்ளளவும், ஊசி முனையளவும் யாருக்கும் எவ்வித மாற்று கருத்தும் நிச்சயம் கிடையாது .
ஆனால் ஊடகங்களும், அயோக்கிய அரசியல் கட்சிகளும் சுஜித் வில்சன் விஷயத்தை ஊதி பெரிதாக்குவது ஏன் ?
இரண்டு காரணங்கள்.
ஒன்று மோடிக்கு எதிராக மக்களை கொம்புசீவும் கீழ்த்தரமான அரசியல் ....
இரண்டாவது காரணம் .... சொல்ல சங்கடமாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை.
மேற்காணும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் அனைத்திலும் இறந்தது, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்து குடும்பங்கள் ...
சுஜித் வில்சன் குடும்பம் மட்டுமே கிறிஸ்தவ குடும்பம் ....
மீடியா கிறிஸ்தவர்கள் வசம், அரசியல் கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரின் எடுபிடிகள் ....
எப்படி பார்த்தாலும் இந்துக்கள் இளிச்சவாயன்களே ....
என் மனதில் பட்டது இது ... சரியா ? தவறா ? நீங்களே யோசித்துப்பாருங்கள் ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...