Thursday, October 31, 2019

ஒருநாள்_திறக்கும்_வாசல்.


திருச்செந்துாரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது.
முருகப்பெருமான் இத்தலத்தில்
கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும்.
ஆனால்,
அப்பகுதியில் கடல் இருப்பதால்
மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால்,
எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.
கந்தசஷ்டி விழாவில்
முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
ஆனாலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.✍🏼🌹

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...