கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி. அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர். பிறருடைய பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அந்த வகையில் திருஷ்டி சுத்தி போடுவது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, July 13, 2021
திருஷ்டி...!!
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
மிளகாய், உப்பு, சிறிது தெருமண் இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு ஊருகண்ணு, உறவுகண்ணு, நாய்கண்ணு, நரிக்கண்ணு, நோய்கண்ணு, நொள்ளகண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக்கண்ணு, அந்தகண்ணு, இந்தகண்ணு எல்லாம் கண்ணும் பட்டுப் போக... கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள். இது ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!
திருஷ்டி கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். ஆனால் திருஷ்டி கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். மேலும் கிழக்குத்திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும். தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.
கழிக்கும் வகைகள் :
கற்பூரத்தை ஏற்றி வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். இவ்வாறு போடும்போது கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரைந்துவிடுமாம்.
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு.
சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும்.
கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க வேண்டும். அந்த உப்பு கரையும்பொழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.
வீடு, வண்டி வாகனம், வியாபாரம் செய்யும் இடங்களில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிந்தால் திருஷ்டி கழிந்துவிடும்.
பூசணிக்காயில் குங்குமத்தையும், சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.
ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment