Thursday, October 28, 2021

இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும்.

19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் வைகுண்ட ஏகாதசி வரும்
விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்டபோது
மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தால் எதை கொண்டாடுவது எப்படி கொண்டாடுவது என கேள்வி வந்தபோது
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி வைகுண்ட ஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரியபெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்
அன்றுமுதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகையிலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றுவருகிறது
இந்த வருட வைகுண்ட ஏகாதசி அட்டவணை
03.12.2021 - திருநெடுந்தாண்டகம்
04.12.2021 - பகல்பத்து (திருமொழித் திருநாள்) தொடக்கம்
13.12.2021 - மோகினி அலங்காரம்
14.12.2021 - வைகுந்த ஏகாதசி (பரமபதவாசல் திறப்பு) - அதிகாலை 4.45 மணி ( திருவாய்மொழித் திருநாள்)
19.12.2021 - திருக்கைத்தல சேவை - மாலை 6.00 - 6.15 மணி
21.12.2021 - திருமங்கை மன்னன் வேடுபறி - மாலை 5.30 - 6.00 மணி
23.12.2021 - தீர்த்தவாரி - காலை 11.00 மணி
24.12.2021 - நம்மாழ்வார் மோக்ஷம் - காலை 6.00 - 7.00 மணி
May be an image of 1 person


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...