Thursday, October 28, 2021

நேற்று பொதிகையை சாடினேன்.... பிரதமர் உரையை இருட்டடிப்பு...

 நேற்று பிரதமர் ஆற்றிய உரை.... தமிழக மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது... என்ற எண்ணமே....

அப்படி என்னதான்யா பேசினார் என்று நீங்கள் புலம்புவது காதில் விழுகிறது...
விபரம் கீழே.... முழுவதும் படியுங்கள்...
பெட்ரோல் மீது மத்திய வரி குறைக்காதது, இந்தியாவை முந்தைய அரசு விட்டு சென்ற கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்கு - பிரதமர் வாக்கு மூலம்.
"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.
இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பிரதமராக பதவியேற்றபோது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.
இரான் 48000 கோடி.
ஐக்கிய அரபு எமிரேட் 40000 கோடி
இந்திய எரிபொருள் நிறுவனங்கள் 133000 கோடி
இந்தியன் ஏர்லைன்ஸ் 58000 கோடி
இந்திய ரயில்வே 22000 கோடி
பி.எஸ்.என்.எல் 1500 கோடி.
நமது பாதுகாப்பு படையினருக்கு அடிப்படை ஆயுதங்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் இல்லை.
ஒரு போரை எதிர்த்துப் போராட வேண்டுமானால் 4 நாட்கள் கூட தாங்க முடியாத அளவு ஆயுதங்கள் மட்டுமே இருந்தது.
அது மட்டுமல்ல, உளவுத் துறை கூட ஒரு பெரிய தோல்வியாக இருந்தது. வெடிகுண்டுகள் எப்போது, ​​எங்கு வெடிக்கும் என்று யூகிக்க முடியாத நிலை இருந்தது.
நான் பொறுப்பேற்றபோது இதுதான் நிலைமை. அந்த நேரத்தில் எனது பிரதான பொறுப்பு அனைத்து அமைப்புகளையும் சரிப்படுத்துவது மற்றும் கடன் தொல்லையில் இருந்து மீழ்வது ஆகும்.
அதிர்ஷ்டாவசமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை விகிதங்கள் குறைந்துவிட்டிருந்தது. குறைக்கப்பட்ட விலைகள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படாமல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.
அதனால், என் மீது இவ்வளவு அன்பு கொண்டு இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் நீங்கள் என் மீது ஒரு சிறிய கோபம் கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உதவ முடியவில்லை. காரணம், நமது எதிர்கால தலைமுறைகளை மனதில் வைக்கவேண்டியிருந்தது.
முந்தைய அரசாங்கத்தின் தவறுகள் எங்களுக்கு போராட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
அவர்கள் ஆட்சி காலத்தில், எரிபொருள் விலை 120 டாலர்களாக இருந்தபோது அவற்றை லிட்டருக்கு ரூ .85 க்கு விற்றனர். அது எப்படி சாத்தியம் ஆனது? கடனில் அந்த எரிபொருளை வெளிநாடுகளில் இருந்து அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். பொது மக்களின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக அவர்கள் விலையை அதிகரிக்கவில்லை. மானிய விலையில் விற்றதுடன் கடனையும் செலுத்தவில்லை.
இந்த வழியில் அவர்கள் 250000 கோடிக்கு வெளிநாட்டு கடன்களை வைத்திருந்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 25000 கோடியை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்திய எரிபொருள் நிறுவனங்களுக்கு 133000 கோடி கடன் வைத்து இருந்தார்கள்.
நம் நாடு மிகப்பெரிய கடன்களுக்குச் உள்ளாகி இருந்த நிலயில், தடையில்லாமல் எரிபொருளைப் பெற கடன்களைச் செலுத்த நாங்கள் கூறப்பட்டோம்.
பெட்ரோல் /டீசல் மீது மத்திய அரசு வரி வசூலிக்கப்பட்டதற்கான காரணம் இதுதான். அதனால்
இன்று நாங்கள் 250000 கோடி கடனை வட்டியுடன் முடித்துவிட்டோம் என்று பெருமையுடன் சொல்ல முடியும். (இது உங்கள் கடன். நாட்டு மக்கள் அனைவரின் கடன்)
ரயில்வே இழப்புகள் அகற்றப்பட்டுள்ளன. முந்தைய நிர்வாகங்கள் நிலுவையில் வைத்திருந்த அனைத்து கடன்களும் முடிவடைந்தன. புல்லட் ரயிலை மின்மயமாக்குவது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
18500 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 40 ஆயிரம் கிலோமீட்டர் புதிய சாலைகள் கட்டப்பட்டுள்ளன.
150000 கோடி இளைஞர்களுக்கு முத்ரா கடன்களாக வழங்கப்பட்டது.
ஆயுஷ்மான் பாரத் 50 கோடி மக்களுக்கு 150000 கோடியுடன் தொடங்கப்பட்டது.
அனைத்து நவீன மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் நமது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இது உங்கள் தியாகம். எரி பொருள் மீது நீங்கள் செலுத்திய மத்திய அரசு வரி மூலம் இவை சாத்தியம் ஆனது. நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் (you are part of the show).
நாம் வரியை அகற்றினால் என்ன? நம்மால் கடன்களை அடைக்கமுடியாதா? அடைக்க முடியும். ஆனால் மறைமுகமாக நாம் எல்லா விஷயங்களிலும் வரிகளை அதிகரிக்க வேண்டும். இது 130 கோடி மக்கள் அனைவருக்கும் சுமையாக இருக்கலாம். ஆனால் எரி பொருள் விலை சுமை பெருமளவில் வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தும்.
கடைசியாக ஒரு விஷயம்.
உங்கள் குடும்பத்தின் தலைவராக இருக்கும் நீங்கள், உங்கள் குடும்பம் பெரும் கடன்களில் இருக்கும்போது நீங்கள் அதிர்ஷ்டத்தால் பெற்ற பணத்தை என்ன செய்வீர்கள்??
நீங்கள் பொறுப்பற்ற முறையில் செலவிடுவீர்களா? அல்லது
கடன்களை அடைப்பீர்களா?
பொறுப்பற்ற முறையில் செலவிட்டால் குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும்?
உங்களுக்கு கடன் கொடுத்த நபர் தொடர்ந்து மிகவும் பொறுமையாக இருப்பாரா? (நாடும் ஒரு குடும்பம் தான்)
இந்த நாட்டின் தேசபக்தியுள்ள குடிமகனாக தயவுசெய்து நாட்டின் வளர்ச்சியில் என்றென்றும் கைகோருங்கள்.
எதிர்க்கட்சிகளின் வித்தைகளுக்குள் வீழ்ந்து விடாதீர்கள். இந்த எதிர்க்கட்சிகள் எப்போதுமே தேர்தல் எண்ணம் கொண்டவை, இப்போது வெவ்வேறு மாநிலங்களில் ஒரு தேர்தல் வரும்போதெல்லாம் தவறான பிரச்சாரங்களுடன் மக்களை குழப்ப முயற்சிக்கின்றன.
தயவுசெய்து சிந்தியுங்கள்!
தயவுசெய்து இதை அனைத்து இந்தியர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
உங்கள்,
பாரத் மாதா கி ஜெய்!!!
இந்தியா வல்லரசு ஆக, மீண்டும் வேண்டும் மோடி.
தேச பக்தி, நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் இதை அனைவருக்கும் பகிருங்கள்.
ஜெய் ஹிந்த்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...