Thursday, October 28, 2021

அந்த மன்னார்குடி குடும்பத்தை உள்ளே விடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் ... பின் கட்சியை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்றமுடியது.

 இங்கு எடப்பாடியார் ஆதரவுக்கு ஜாதி சாயம் பூசுகிறார்கள் சிலர்,.. இதே கொங்கு மண்டலம் அன்று திரு.ஓபிஸ் அவர்கள் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவரோடு துணை நின்றவர்களில் திரு. ஆறுகுட்டி மற்றும் செம்மலை அவர்கள் அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சத்யபாமா அவர்களும் அதில் அடக்கம். பெரும்பான்மை முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர் பின்னால் நின்றனர்..

கொங்கு மண்டலம் வந்த போது அவரை கொண்டாடி களைத்தவர்கள் நாங்கள்...
அன்றும் திருமதி.சசிகலா எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் தான் நின்றோமே தவிர திரு.ஓபிஸ் அவர்கள் ஜாதி பலம் எல்லாம் பாரத்து முடிவு எடுக்கவில்லை.
திமுக எதிர்ப்பு எவ்வளவு எங்கள் தீர்க்கமோ, அதை விடவும் திருமதி.சசிகலா மற்றும் அவர் உறவுகளை கட்சிக்குள் எந்த நிலையிலும் அனுமதித்து விடக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளோம்.
ஒரு குடும்பத்திடம் அடிமை படுவதென்று முடிவெடுத்துவிட்டால் தாராளமாக திமுக வில் சேர்ந்துவிடலாமே.. எதற்கு இன்னொரு இயக்கத்தில் பயணிக்க வேண்டும்?!..
மன்னார்குடி குடும்பம் மற்றும் திமுக எதிர்ப்பு, இந்த இரண்டையும் திரு.எடப்பாடியார் உறுதியோடு செய்கிறார், ஆதலால் அவர் பக்கம் நாங்கள் நிற்கிறோம்.. அவர் தடுமாறினாலும் கூட வேறு யார் அந்த இடத்தை நிரப்பும் வல்லமை கொள்கிறார்களோ.. அவரை முன்னிறுத்தி பயணிப்போம்.
என்றும் இது சாதாரண தொண்டன் மனநிலையை பிரதிபலிக்கும் தலைமையை கொண்டாடும் இயக்கமாய் இருக்குமே தவிர..
ஒரு குடும்பத்துக்கோ, ஒரு குறிப்பிட்ட ஜாதியை நம்பியோ ஒரு நாளும் இருக்காது!..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...