Friday, October 29, 2021

ஆரோக்கியமான உடலமைப்பை பெற ஓர் உலர் பழம் உதவும் என்பது தெரியுமா?

 முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய காலத்தில் ஆண்கள் இளம் வயதிலேயே பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஆண்கள் நல்ல வலிமையான மற்றும் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். இதுவே ஒரு ஆணிற்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். வலுவான மற்றும் ஆரோக்கியமான தசைகளைக் கொண்ட ஆண்களிடமே பெண்கள் அதிகம் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு ஆண் நல்ல வலிமையான உடலமைப்பைப் பராமரித்து வந்தால், அவரது காதல் உறவு கணிசமாக மேம்படும் மற்றும் உங்கள் டேட்டிங் அட்டகாசமாக இருக்கும்.

இப்படியான கட்டுக்கோப்பான, ஆரோக்கியமான உடலமைப்பை பெற ஓர் உலர் பழம் உதவும் என்பது தெரியுமா? அது தான் உலர்ந்த பேரிச்சம்பழம்/உலர் பேரிச்சை. இந்த உலர் பேரிச்சையில் ஆண்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு சத்துக்கள் உள்ளன. இது ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் நன்மைகளை அளிக்கும். குறிப்பாக உலர் பேரிச்சம்பழம் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்ததாக அறியப்படுகின்றன. அதுவும் இதை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும். இப்போது பாலுடன் உலர் பேரிச்சம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.
எலும்பு ஆரோக்கியம்
உலர் பேரிச்சம்பழத்தில் கனிமச்சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகளை வலிமையாக்க மற்றும் எலும்பு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இவற்றில் மாங்கனீசு, காப்பர், கால்சியம், மக்னீசியம் போன்றவை வளமான அளவில் உள்ளதால், உலர்ந்த பேரிச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது, இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையை இன்னும் அதிகரிக்கிறது.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்
உலர் பேரிச்சம்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதில் சிறந்தது. ஏனெனில் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு, ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாலுடன் உலர் பேரிச்சையை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
மூளை ஆரோக்கியம் மேம்படும்
மக்கள் நல்ல தோற்றத்தை விட புத்திசாலித்தனமாக இருந்தால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். பெண்கள் பெரும்பாலும் கூர்மையான மனம் மற்றும் அதிக புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ஆண்களையே விரும்புகிறார்கள். ஆண்களே நீங்களும் இம்மாதிரி புத்திசாலியாக இருக்க வேண்டுமென நினைத்தால், பாலில் உலர்ந்த பேரிச்சையை ஊற வைத்து சாப்பிடுங்கள். இது மூளையின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக பேரிச்சம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மூளையை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன என்பதற்கான போதுமான சான்றுகள் உள்ளன.
இதய ஆரோக்கியம் மேம்படும்
தற்போது இதய நோய்கள் இளைஞரிடையே அதிகரித்து வருகின்றன. உலர் பேரிச்சையில் கொழுப்பு குறைவாகவும், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், இது இதயத்திற்கு சிறந்த உணவாக அமைகிறது. உலர் பேரிச்சையை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
நரம்பு மண்டலத்திற்கு உதவும்
உடல் ஆரோக்கியத்தில் நரம்பு மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவே அன்றாட செயல்பாடுகளை சரிவர செய்வதற்கு உதவுகிறது. உலர் பேரிச்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் திறம்பட பதிலளிக்கக்கூடிய நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. மேலும் இது தூக்க சுழற்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே நீங்கள் தூக்க பிரச்சனையை சந்தித்து வந்தால், உலர் பேரிச்சையை பாலுடன் சேர்த்து சாப்பிட ஆரம்பியுங்கள்.
ஸ்டாமினாவை அதிகரிக்கிறது
உலர் பேரிச்சையில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது ஆண்களின் ஸ்டாமினாவை அதிகரிக்கும். அதுவும் பாலில் உலர் பேரிச்சையைப் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால், உடல் அதிலிருந்து நிறைய நன்மைகளைப் பெறும்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது
சுவாச அமைப்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், பாலுடன் உலர் பேரிச்சையை சேர்த்து சாப்பிடுங்கள். ஏனெனில் இப்படி சாப்பிடுவது சுவாச ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி புரிவதாக நம்பப்படுகிறது .
எடை அதிகரிக்க உதவும்
நீங்கள் ஒல்லியாக அல்லது எடை குறைவாக இருந்தால், உடல் எடையை அதிகரிக்க நினைத்துக் கொண்டிருந்தால், இந்த பானம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் போதுமான அளவு புரோட்டீன் உள்ளது. இது எடை அதிகரிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரத்த சோகையை தடுக்கும்
உலர் பேரிச்சையை பாலுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகையில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். ஏனெனில் இரத்த சோகை என்பது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரக்கூடிய ஓர் பிரச்சனை. இந்நிலையானது உடலில் போதுமான இரத்தம் இல்லாமல் இருக்கும் போது வருகிறது மற்றும் இது கடுமையான உடல் சோர்வை ஏற்படுத்தும். பேரிச்சையில் இரும்புச்சத்து உள்ளது. இது இரத்தத்தை உருவாக்க உதவுகிறது. ஆகவே தான் கர்ப்ப காலத்தில் பேரிச்சையை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இனப்பெருக்க ஆரோக்கியம் மேம்படும்
ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் பேரிச்சை பெரிதும் உதவும். அதுவும் முதலில் இவை ஆண்களின் விந்தணுக்கள் மற்றும் பாலுணர்ச்சியை அதிகரிக்கின்றன. இது துணையுடன் சிறப்பாக இணைய உதவுகின்றன மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகின்றன.
சிறப்பான பலனை விரைவில் பெறுவதற்கு, சில உலர் பேரிச்சையை பால்/நீரில் இரவு தூங்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து, அத்துடன் ஏலக்காய் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடிக்க வேண்டும். இதைக் குடிக்க ஆரம்பித்ததுமே, நீங்கள் உங்கள் துணையுடன் அதிக நெருக்கத்தை உணரத் தொடங்குவீர்கள் மற்றும் சிறந்த பாலியல் அனுபவங்களைப் பெறுவீர்கள்.
இந்த செய்திகளில் கொடுக்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதி வாய்ந்த மருத்துவக் கருத்துக்கு மாற்றாகாது. மேலும் தகவலுக்கு, நீங்கள் எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...