Sunday, October 31, 2021

அதிகாலையில் இதயத்தைப் குளிர்வித்த வாசகம் அரூப வாசல்கள்.

 ---------- -----------------

நீங்கள் நம்பிய ஒருவர்
உங்களை முழுமையாக கைவிடும் போது
உங்கள் வாழ்க்கை
அவர் கைகளில் இல்லையென்பதை
அறிந்து கொள்கிறீர்கள்
உங்கள் தாகத்திற்கான
நீரூற்றை ஒருவர்
அடைத்து வைக்கும் போது
எங்கோ
ஒரு மேகத்தின்
முடிச்சு அவிழ்ந்து
மழையாகி விடுவதை
கண்கள் நிறைய
காண்கிறீர்கள்
துயரத்தின் கடலில்
யாரோ ஒருவர்
உங்களை
தூக்கியெறியும் போது
நீந்தத் தெரியாத
உங்கள் விரல்களில்
அதிர்ஷ்டம் போல்
அகப்பட்டு விடுகின்றன
நிலம் என்னும்
ஒரு பிடி மண்
உங்கள்
விருப்பத்திற்குரிய ஒருத்தி
விலகிச் செல்லும் போது
புன்னகையால்
பாய்விரித்து
வாரி அணைக்கிறாள்
இலக்கண சிலம்புடைக்கும்
இணையொருத்தி
மருத்துவம்
கைவிடும் போது
ஆரத்தழுவிக்கொள்ளும்
மரணம் போல
இந்த வாழ்க்கையை
வழிநடத்துகின்றன
சொற்களால்
வர்ணிக்க இயலாத
அரூப வாசல்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...