Wednesday, October 27, 2021

எத்தனுக்கு, எத்தன், இவள்தான்! இப்படித்தான், வாழனும்!

 

😇😇😇😇😇😀😀😀
சார், மிஸ்டர் தண்டபாணி வீட்ல இருக்காரா?”
“இல்லைங்க”
*“வெளில போயிருக்காரா?”*
“இல்லைங்க”
*“அதெப்படிங்க, வீட்லயும் இல்லாம வெளிலயும் போகாம ஒருத்தர் இருக்க முடியும்?”*
“இருக்காரான்னு கேட்டப்பவே இல்லைன்னுட்டேன். இருந்தாத்தானே வெளில போக முடியும்? இல்லாதவர் எப்படிப் போக முடியும்?”
*“வெளில போனதினாலே இல்லாம இருக்கலாம் இல்லையா?”*
“இல்லாததாலே வெளில போகாம இருக்கலாம் இல்லையா?”
*“வெளில போறத்துக்கு முன்னாலே வீட்ல இருந்தாரா?”*
“வெளில போனாத்தானே போறத்துக்கு முன்னால இருந்தாரான்னு சொல்ல முடியும்? அதான் போகல்லைன்னுட்டேனே”
*“ரொம்பக் குழப்பறீங்க. இது தண்டபாணி சார் வீடுதானே?”*
“இல்லை”
*“பின்னே ஏன் தண்டபாணி இருக்காரான்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க?”*
“நல்ல கதையா இருக்கே. தண்டபாணி அவர் வீட்ல இல்லைன்னா மட்டும்தான் வீட்ல இல்லைன்னு சொல்லணுமா? என் வீட்ல இல்லைன்னாலும் சொல்லலாமே?”
“இது தண்டபாணி வீடு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?”
*“நீங்க இது தண்டபாணி வீடுதானேன்னு கேட்க வேண்டியதுதானே”*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...