Friday, February 25, 2022

தி.மு.க.,வை வீழ்த்திய 2 ஓட்டு..........

 பரமக்குடி நகராட்சி தேர்தலில் தி.மு.க., வில் வாய்ப்பு கிடைக்காத மூன்று பெண் வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர்.இதில் 20 வது வார்டில் பி.இ., பட்டதாரி சுகன்யா, சுயேச்சையாக களத்தில் நின்று 475 ஓட்டுகள் பெற்றார்.


தி.மு.க., வின் ரம்ஜான் கனி 473 வாக்குகள் பெற்று 2 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 30 வது வார்டில் போட்டியிட்ட மாரியம்மாள் 644 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் செல்வி 483 ஓட்டுகளும் பெற்றனர்.34 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட கிருஷ்ணவேணி 634 ஓட்டுகள் பெற்றார். தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் ராணி பெற்ற 350 ஓட்டுகள் மட்டும் பெற்றார்.இவர்கள் மூவருமே தி.மு.க.,வில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள்.


 தி.மு.க.,வை வீழ்த்திய 2 ஓட்டு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...