Monday, February 21, 2022

முன்னாள் அ.தி.மு.க, அமைச்சர் ஜெயக்குமார் கைது..

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தண்டையார் பேட்டை 49-வது வார்டில் மறு ஓட்டுப்பதிவு இன்று நடந்தது. இதில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை அதிமுகவினர் பிடித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.

தாக்கப்பட்ட நபர் தி.மு.க., நிர்வாகி என கூறப்படுகிறது. இதையடுத்து தி.மு.க.,வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 அ.தி.மு.க., வினர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், என 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு ஜெயக்குமாரை கைது செய்தனர்.
கைதான ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஜெயக்குமார் கார் டிரைவர் தி.மு.க., வினர் மீது புகார் கொடுத்ததையடுத்து 10 தி.மு.க., வினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
May be an image of 2 people and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...