Saturday, February 12, 2022

முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் தேவர் சமுதாயம் பற்றி இன்று பார்ப்போம்.

 வீரத்திற்கு பெயர் போன சமுதாயம்...

திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற தென்தமிழகம் முழுக்க தேவர் ...
மதுரை மற்றும் பிற இடங்களில் கள்ளர் .
தமிழகத்தில் மிகப்பெரிய ஓட்டு வங்கி உள்ள சமூகத்தில் இவர்களுக்கும் பெரிய இடமிருக்கிறது...
தேனி உசிலம்பட்டி பகுதிகளில் இந்த சமூகத்தைத் தவிர வேறு யார் நின்றாலும் டெபாசிட் கிடைப்பது கஷ்டம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இவர்களுக்கு பிரம்மன் மாதிரி அந்த அளவுக்கு இவர்கள் அவரை நேசிக்கிறார்கள்
கள்ளர் அகமுடையார் மறவர் சேர்வார் என்று பல பெயர்களில் இருந்தாலும் இவர்கள் தேவர் தேவர் தான் ...
தமிழக அரசியல் களத்தில் இவர்களுக்கு பெரிய பங்கு உண்டு அதை இவர்கள் ஒற்றுமையாக பயன்படுத்தினால் இவர்களை யாரும் அசைக்கக்கூட முடியாது
தஞ்சாவூர் பக்கம் வாண்டையார் குரூப்ஸ் மதுரை பக்கம் ஒரு குரூப்ஸ் திருநெல்வேலி பக்கம் ஒரு குரூப்ஸ் இப்படி தனித்தனியாக இவர்கள்
பிரிந்திருந்தாலும் ....
ஓட்டு அரசியலில் பெரிய பங்கு இவர்கள் தான்..
அதை சரியாக பயன்படுத்தி அறுவடை செய்தது ......ஜெயலலிதா அரசு ...
அதிமுகவின் வெற்றிக்கு இவர்கள் பங்கு பெரிது...
இந்த சமுதாயத்தில் பிறந்த பாரதிராஜா கூட இவர்களை பற்றி படம் எடுக்காவிட்டாலும்
கமல் தேவர் மகனில் அதை செய்தார் ....
இன்றும் பல பிரபலங்களுக்கு பாதுகாவலர்கள் இவர்கள் தான்
சிவாஜி' பிரபு முத்துராமன் கார்த்திக் பாரதிராஜா சசிகலா கருணாஸ் தினகரன் திவாகரன் நடராஜன் என பட்டியலிட முடியாத அளவுக்கு பிரபலங்கள் நிறைய நிறைய
என்னதான் அடுத்த சமுதாயத்து காரர்கள் இருந்தாலும் ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் அதற்கு பஞ்சாயத்து பேசணுமா தேவரய்யா கூப்பிடுங்க என்றுதான் இன்றும் பல கிராமங்களில் நடைபெறுவது இயல்பு அந்த அளவுக்கு மக்களுக்கு பல பிரச்சினைகளுக்கு இவர்கள் தீர்வு காணுகிறார்கள் ஃ
இன்றும் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உங்களது குடிக்கள்ளன் யார்? என்று தான் கேட்பார்கள் .... ஒரு திருமணம் மற்றும் பல விஷயங்களுக்கு .....
இவர்களது பலமே முரட்டுத்தனமான அன்பு கலந்த கோபம் ... அதுவே பலவீனமும் ....
கோபம் கலந்த முரட்டுத்தனத்தை மட்டும்
விட்டு விட்டால் இன்றும் இவர்களை அசைக்க வேறு ஆள் இல்லை .....
சில நகரங்களில் வாடகைக்கோ அல்லது
ஒத்திக்கோ வீடு கேட்கப் போனால்?
இந்த சமூகத்து பேர் சொன்னாலே? ஒரு அச்சம் கலந்து மறுப் பார்கள் ...
அந்தளவுக்கு பயம்.. அதுவே இவர்கள் பலவீனம் ....
வன்முறையை மட்டும் இவர்கள் கைவிட்டு, கல்வி மற்றும் பிற நலன்களில் இவர்கள் ஈடுபட்டால் இவர்களை அசைக்க ஆள் இல்லை.
இந்த சமூகத்தில் பல ஜாதித் தலைவர்கள் கூட்டம் .. கூட்டமாக இருக்கிறார்கள். அத்தனையும் ஒன்று சேர்ந்தார்கள் என்றால் .....
திமுக அதிமுகவுக்கு இங்கு பெரிய ஓட்டு வங்கி சிதறும் வாய்ப்பு ...
இன்னும் நிறய்ய எழுதலாம்? இவர்கள பற்றி? வேறு சந்தர்ப்பங்களில் பார்ப்போம்? நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...