Monday, February 14, 2022

பிரார்த்தனையில் யாரையும் சபிக்க கூடாது.

 சிவாலயத்திற்கு செல்லும்பொழுது எல்லோரும் மூலவரான சிவலிங்கத்துடன் வேண்டுகிறோம். நான் பிரார்த்தனை என்று நம்புகிறோம். இது தவறு.

மூலஸ்தானத்திற்கு நுழையும் முன்பாக துவாரபாலகர்கள் இருவர் இருப்பர். அந்த இருவரில் யாராவது ஒருவரிடம் நாம்
அவரது முகம் பார்த்து பின்வருமாறு நாம் நினைக்க வேண்டும்.
நம்முடைய பெயர்
நம்முடைய பிறந்த நட்சத்திரம்
நம்முடைய பிறந்த ஊர்
நம்முடைய கோத்திரம் நம்முடைய தொழில் இவை அனைத்தையும் நினைக்க வேண்டும்.
பிறகு நம்முடைய கோரிக்கைகளை வரிசையாக கூற வேண்டும்.
என் மகளுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும்.
எனது கடன் இன்னும் ஒரு வருடத்திற்குள் தீர வேண்டும்.
எதிரிகளும் துரோகிகளும் செய்யும் எந்த ஒரு மாந்திரிக தாக்குதலும் என்னையும் எனது குடும்பத்தையும் எனது தொழிலையும் சிறிதும் பாதிக்காத அளவுக்கு நான் ஆத்மா பலத்தோடு இருக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை உள்ளே இருந்து அருள்பாலிக்கும் அப்பாவிடம் தெரிவித்து விடுங்கள். என்று வேண்ட வேண்டும்.
அப்படிச் செய்தால் அன்று நள்ளிரவு 3 மணிக்கு துவாரபாலகர் உள்ளே இருந்து அருள்பாலிக்கும் சிவலிங்கத்துடன் முறைப்படி தெரிவிப்பார்.
(ஒவ்வொரு ஆலயத்திலும் நள்ளிரவு 3 மணிக்கு எல்லா தெய்வீக சன்னதியில் இருந்தும் சிற்பங்கள் உயிர் பெற்று எழுந்து வரும்.மூலஸ்தானத்திற்கு சென்று அன்று முழுவதும் அந்த ஊரில் என்ன நடந்தது என்பதை மூலவரிடம் தெரிவிக்கும். இதை நாம் யாரும் பார்க்க முடியாது.)
இந்த பிரார்த்தனையில் யாரையும் சபிக்க கூடாது.
நமக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே கேட்டுக் கொள்ளவேண்டும் வேண்டிக் கொள்ள வேண்டும்.
சித்தர்கள் அருளிய பிரார்த்தனை முறை இதுதான்.
இந்த முறையினை எமது குருவின் அருளால் உங்களுக்கு தெரிவித்து விட்டோம்.
சிவாய நம சிவாய நம சிவாய நம.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...