Monday, February 21, 2022

அவனுகளும் அவனுக செய்தியும்...

 உண்மையில் தமிழக மக்கள் மிக பரிதாபமானவர்கள், அப்படி மிக மிக முட்டாளாக்கபடுகின்றார்கள் அல்லது அவர்களை முட்டாள்களாக நினைத்து தமிழக மீடியாக்கள் மிளகாய் அரைக்கின்றன‌

இதில் பத்திரிகை முதல் டிவி மீடியா வரை உண்டு, அப்படி சில நாட்களாக தமிழக டிவிக்கள் ஒரு விஷயத்தை சொல்கின்றன அது ரஷ்யா அணு ஆயுதத்தை கையில் எடுத்துவிட்டது, அணு ஆயுத சோதனை செய்தது என்பது
அணு ஆயுதம் என்பது ஏதோ கட்சிக்காரன் வீசும் சோடா பாட்டில் போலவோ இல்லை பெட்ரோல் குண்டு போல இவை கருதுவது மகா சோகம்
அணு ஆயுத ஒப்பந்தபடி அமெரிக்காவும் ரஷ்யாவும் புதிய அணுசோதனை செய்ய கூடாது அந்த அளவு தன்னிறைவு பெற்றுவிட்டார்கள், டீப்ளாய் அணுகுண்டு எனப்படும் வெடிக்க தயாரான அணுகுண்டு இரு நாட்டிடம் அதிகம்
இரு நாடுகளும் அணு ஆயுத சோதனை செய்வதில்லை அப்படி செய்தாலும் ஆளில்லா ஆர்டிக் அண்டார்டிக்காவில் செய்வார்கள் உலகில் யாருக்கும் தெரியாது
இந்நிலையில் ரஷ்யா அணு ஆயுதங்களை வீசும் சில வாகனங்களை தயார் செய்தது, ஏவுகனை விமானம் கப்பல் போன்றவற்றில் அணுகுண்டின் மாதிரிகளை அதாவது அந்த அளவு எடை மற்றும் இதர விஷயங்களை வைத்துத்தான் சோதித்தது
அதற்குள் தமிழக மீடியாக்கள் ரஷ்யா அணுகுண்டைசோதித்ததாக வரிந்து கட்டுகின்றன‌
சரி, என்னவகை அணுகுண்டை ரஷ்யர்கள் எங்கே சோதித்தார்கள்? அதன் விளைவு என்ன? எவ்வளவு டி.என்.டி சக்தியினை அது வெளிபடுத்தியது என கேட்டால் பதிலே வராது
இதில் ஆளாளுக்கு கோட்டும் சூட்டும் போட்டு ஏதோ அல் ஜசீரா நிருபர் போல அழிச்சாட்டியம் வேறு
"அணுஆயுதம் சோதித்த ரஷ்யா,அதிர்ச்சியில் உலகம்" என இவர்கள் சொன்னதை கேட்டு உலகம் அதிர்ச்சியுடன் பார்க்கின்றது
இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு உளவாளிகள் இந்நேரம் கைதட்டி சிரித்து மகிழலாம், சொல்லமுடியாது ரஷ்யா அணுஆயுத சோதனை செய்ததை இந்தியாவின் தமிழக மீடியாக்கள் கண்டறிந்தன என பிடன் சீரியசாக வெள்ளை மாளிகையில் தமாஷ் செய்யலாம்
தமிழக மீடியாக்களும் டிவியும் தங்களுக்கு தெரியாத விவகாரத்தில் செல்லாமல் தங்களுக்கு தெரிந்த "சமூக நீதி" "ராம்சாமி சாதனை" "இட ஒதுக்கீடு விவாதம்" "பாசிச பாஜக" "தலையினை ஏன் மூட வேண்டும்" "ஸ்டாலினார் சாதித்தது எப்படி?" என அறிவுபூர்வமான விவாதங்களை செயயட்டும்
மாறாக உலக விஷயங்களை அரைகுறையாக தெரிந்து அழிச்சாட்டியம் செய்வதெல்லாம் பரிதாபம், தமிழக மீடியா எப்படி அரைகுறைகளால் நிறைந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது தமிழக மக்கள் எப்படிபட்ட மட கூட்டத்திடம் சிக்கியிருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது
அணு ஆயுத மாதிரிக்கும் அதை சுமந்து செல்லும் ஏவுகனைக்கும் உண்மையான அணுஆயுத சோதனைக்கும் வித்தியாசம் தெரியாதவனெல்லாம் 8 கோடி தமிழருக்கு செய்தி சொல்வது மாபெரும் காமெடி
உண்மையில் பொய்செய்தி என இவர்கள் உரிமத்தை ரத்து செய்யும் அளவு அவமானமான விஷயம் இது
உண்மையில் ரஷ்யா செய்தது மிக கனமான அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் பிரத்யோக‌ ஏவுகனையும் விமானமும் நீர்மூழ்கியும் சரியாக வேலை செய்கின்றதா என்பது, காரணம் சாதாரண ஏவுகனை விமானமெல்லாம் அணுகுண்டை சுமக்க முடியாது அவ்வளவு எடை கூடியது அது, கூட சில துல்லியமான இதர விஷயங்களும் அதற்கு அவசியம்
அதைத்தான் புட்டீன் முன்னிலையில் சோதித்தது ரஷ்ய ராணுவம், அதுவும் உலகின் அதிவேக ஏவுகனையான ஹைப்பர் சோனிக் கொண்டு சோதித்தார்கள், அமெரிக்காவுக்கான எச்சரிக்கை இது, காரணம் இதை தடுக்கும் சாதனம் உலகில் யாரிடமும் இப்போதைக்கு இல்லை ரஷ்யர்களை தவிர‌
ஒரு அணுசோதனையே தெரியாத கூட்டம் மக்களுக்கு சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சி, மத நல்லிணக்கம், பட்ஜெட், பொருளாதாரம் என எதை எதையோ பேசும் என்றால் அது எவ்வளவு பெரிய பரிதாபம்?
அபாயமான அணுகுண்டை ஒரு ராணுவ பயிற்சியில் வெடிக்க வைக்க முடியுமா? வெடித்தால் விளைவு எவ்வளவு கடுமையாகும் என்பதெல்லாம் கூட புரியாத மிகபெரிய மடத்தனம் இது, இவ்வளவுதான் இவர்கள் அறிவு
ஆக தமிழனை மானமும் அறிவும் உள்ளவனாக மாற்ற ஒரே வழி அவர்கள் வீட்டின் டிவி ஆண்டெனாவினை பிடுங்கி எறிவது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...