Thursday, February 24, 2022

எது கடினம் என்று கேட்டு இரண்டு ஆப்ஷன் கொடுத்திருந்தேன்.

 ) திமுகவுக்கு ஓட்டு போடும் இந்துக்களை திருத்துவது,

2) பிஜேபியை வெறுக்கும் முஸ்லிம்,கிருஸ்துவர்களை திருத்துவது என்று.
பலரும் முதல் ஆப்ஷனையே தேர்ந்தெடுத்தார்கள்.முத்தாய்ப்பாக துக்ளக் பத்திரிக்கையின் ரிப்போர்டரும், எனது ஃபேஸ்புக் நண்பருமான Sudhir ஒரு கருத்தை சொன்னார்.திமுகவுக்கு ஓட்டு போடும் இந்துக்கள் திருந்தினால் இரண்டாமவர்கள் தன்னால் மாறுவார்கள்.முதலாவது பணத்தாசை,இரண்டாவது பிடிவாதம் என்று கமெண்ட் போட்டார்.
அந்த பதில் நூற்றுக்கு நூறு உண்மை.அந்த கமெண்டுக்கு ஹார்டின் சிம்பல் போட்டேன்.பிஜேபி என்றாலே கொலைகார கட்சி,முஸ்லிம்களை கூண்டோடு ஒழித்து விடும் என்று நம்பிய பெரும்பாலான முஸ்லிம்கள் இன்று மனம் மாறியுள்ளனர்.அந்த கட்சியையும் மற்ற கட்சிகளை போலவே பார்க்க தொடங்கியுள்ளனர்.
மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் எந்த மத கலவரமும் இல்லாதது முக்கிய காரணம்.இன்று மாலை எனது தாயாரிடம் பேசிக்கொண்டிருந்த போது பிஜேபி தலைவராக முருகன் செயல்பட்டதை விட அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார் என்று சர்வ சாதாரணமாக கூறினார்.அதாவது பிஜேபியை மற்ற கட்சிகளை போலவே கருதுகிறார்.இதற்கு முன்பு அவர் பிஜேபி வெறுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற பல முஸ்லிம்களும் இந்த மனோபாவத்துக்கு மாறிவிட்டனர்.ஆனால் அது ஓட்டுகளாக மாற சிறிது காலம் பிடிக்கும்.அதற்கு முன் நடுநிலை இந்துக்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவதை நிறுத்தினால் வெகு விரைவிலேயே நல்ல மாற்றம் ஏற்படும்.
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...