Friday, February 25, 2022

சனி_தோஷம்_நீக்கும்_ஆஞ்சநேயர்_வழிபாடு!

 ஏழரை_சனி இருப்பவர்கள் #ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும்.

அதேபோல் பலவிதமான இன்னல்கள்_துக்கங்கள் வரும் போது ஆஞ்சநேயருக்கு #நெய்_விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்.
அவருக்கு #வடை_மாலை சாத்துதல் செந்தூரக்காப்பு அணிவித்தல் வெண்ணெய்_காப்பு சாத்துதல் ராம்_ராம் என்று எழுதி மாலை சாத்துதல் போன்ற பரிகாரங்களை செய்தால், நன்மை.
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க #உளுந்து_வடை செய்து கொடுத்ததாக ஐதீகம்.
உளுந்து எலும்பை நல்ல வலுவாக்கும்.
சீதையைச் பல இடங்களில் தேடி காணாது பின் அசோகவனத்தில் அவரை ஆஞ்சநேயர் சந்தித்தார்.
அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக்_கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள் வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும். பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்.
ராம ராவண யுத்தம் நடந்த போது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் ஆஞ்சநேயர் அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் #வெண்ணெய் பூசிக் கொண்டாராம்.
வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது. சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை அவர் நலமா?'' என்று கேட்டாள்.
அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றார். உடனே சீதை மகிழ்ச்சி தாங்காமல் தரையி லிருந்து #செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்., இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்.
அனுமன்தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம். ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார். ராம_நாமத்திற்கு அவ்வளவு மகிமை.
அனுமனுக்கு சக்தி முழுவதும் #வாலில் தான் இருப்பதாக கருதப்படுகிறது. இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவணனுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால்தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது.
ஆகையால் வாலிலிருந்து_சந்தனம்_குங்குமம்_பொட்டு வைத்து ஒரு சுற்று முடிவதற்குள் நினைத்த காரியம் நடக்கிறது என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
'ஹனுமதே நம: ஆஞ்சநேயாய நம: '

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...