Saturday, February 12, 2022

"வார்த்தைகளின் பலம்"

 நேர்மறை ( positive) எண்ணங்களின் வலிமையைக் கொண்டு நாம் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் செயலையும் செய்ய முடியும்.

நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன.
வாழ்க்கை எப்போதும் நாம் நினைப்பது போல இருந்தது இல்லை...
எதிர்மறை ( negative) எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக் கொண்டு இருக்கும்.
அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்குத் தோன்றும். அவை நமக்கு கொடுப்பது வலியும் வேதனையும் தான்.
எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்.
அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது.
ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:
சென்ற வருடம் எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை,கணையத்தில் கல் எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகி விட்டதால் வேலையிலிருந்து ஒய்வு..
அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்..அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு மருத்துவத் தேர்வு எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.என்ன ஒரு மோசமான வருடம், என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.
அவருடைய மனைவி அப்போது தான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்து இருப்பதைப் பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதைப் படித்தார்.
பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதிக், கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.
சென்ற வருடம் நீண்ட நாட்களாக இருந்த வலியில் இருந்து விடுதலை பெற்றேன்.
60 வயது ஆனதால் வேலையிலிருந்து ஒய்வு பெற்றதால், என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுகிறேன்..
என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இயற்கை எய்தினார்.
அதே வருடம் என் மகன் விபத்தில் மீண்டு புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்தக் குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்.
இந்த வருடம் எனக்கு நல்ல வருடம். அவர் மனைவி எழுதியதைப் படித்த கணவர் நன்றிப் பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.
என்ன அற்புதமான மனதிற்கு வலுவூட்டும் வாக்கியங்கள்...
ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில் தான் உள்ளது.
நேர்மறையான வார்த்தைகளை உபயோகிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையை ஆனந்தமாக வாழலாம்.
நாம் நமது எண்ணங்களை முறைப்படுத்துவோம்.அதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்துவோம்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...