Tuesday, December 13, 2022

நீஙகளே தீர்மானிக்க வேண்டாம்.

 இன்று காய்ச்சல் தலைவலியினால் பாதிக்கப்படும் பெரும்பாலான மனிதர்கள் பாராசிட்டமாலை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

பாரசிட்டமால் மாத்திரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதாரணமாக எடுத்தக் கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு எடுத்துக்கொள்வது உயிருக்கே ஆபத்து விளைவிக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளும் அளவை முக்கியமாக அவதானிக்க வேண்டும். குழந்தைகளுக்கு என்றால் குறைவாகவே கொடுக்க வேண்டும்.
மருத்துவர் கூறும் இடைவெளியுடன் தான் குறித்த மாத்திரையை கொடுக்க வேண்டும். குறைவான இடைவெளியில் மாத்திரையைக் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
ஏனெனில் குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக பாரசிட்டால் மாத்திரையைக் கொடுத்தால், கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், சிலதருங்களில் உயிரையும் பறிக்கின்றது.
இதனால் தான் மருத்துவர்களும் பாரசிட்டமால் பாய்சன் என்று கூறுகின்றனர். ஆதலால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அளவினை நீஙகளே தீர்மானிக்க வேண்டாம்.
தவிர்க்க முடியாமல் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, பசியின்மை, மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் என்ற அறிகுறிகள் ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனே அனுகவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...